செய்தி மற்றும் நிகழ்வுகள்
மத்திய வலய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை, பதிவாளர் நாயகம், நுவரெலியா மாவட்டச் செயலாளர், ஹங்குராங்கெத்த பிரதேச செயலாளர் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் 2006.01.03 அன்று ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பதிவாளர் நாயகம் திருமதி எஸ். ஜலதீபன் அவர்களின் தலைமையில், மகா சங்கத்தினரின் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், 2026 புத்தாண்டுக்கான பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கடமைகள் திணைக்கள வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்கள், 2025/08/25 அன்று பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் புதிய பதிவாளர் நாயகமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்கள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பதிவாளர் நாயகம் திணைக்களம் (RGD) தனது மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பதிவு முறையை (eBMD) உத்தியோகபூர்வமாக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கும் விரிவாக்கியுள்ளது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட e-சிவில் பதிவு (e-Civil Registration) வேலைத்திட்டத்தின் கீழ், மின்னணு (Digital) தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (24) இரத்தினபுரி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இரத்தினபுரி மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக பதிவாளர் நாயகம் திரு. கே.ஜி.எஸ். நிஷாந்த அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
டிஜிட்டல் அணுகல் மூலம் பாரம்பரியத்திற்கு" (Digital Access to Heritage) எனும் மின்னணு முறைமையின் கீழ், காலி பிரிவில் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு சனத்தொகை (e-population) திட்டத்தின் கீழ், தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை