பொதுமக்கள் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை இணையவழியில் (Online) விண்ணப்பித்து, பாதுகாப்பான சரிபார்ப்புடன் தங்கள் இல்லங்களிலேயே பெற்றுக் கொள்ள வழிவகை (Home Delivery) செய்யும் மின்-சேவை.
இப்போது நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே பிறப்பு, திருமணம் மற்றும் மரணச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை மிக எளிதாகக் கோர முடியும்!
More Info
இப்போது நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே இலகுவாக உறுதி ஆவணங்களைக் கோரவும், அவற்றின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்!
More Infoe-BMD திட்டத்தின் நோக்கம்
பிறப்பு, திருமணம் மற்றும் மரணச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை விநியோகிப்பது பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பிரதான பணிகளில் ஒன்றாகும். பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அமைய இவ்வாறான பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், சான்றிதழ் இலக்கம், திகதி அல்லது நிகழ்வு நடைபெற்ற காலப்பகுதி போன்ற அத்தியாவசிய விபரங்களை விண்ணப்பதாரர் அறியாத சந்தர்ப்பங்களில், அந்த ஆவணங்களைக் கண்டறிவது சிரமமானதாக அமைகிறது. அதிக நேரம் செலவாகும் இவ்வாறான தேடல்களைத் தவிர்ப்பதற்காக ஈ-பிறப்பு, திருமணம்,மரணம் (e-BMD) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாவன, ஒரு தரவுத்தளத்தைப் பேணுதல், முறைமையின் ஊடாகச் சான்றிதழ்களை விநியோகித்தல் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, திருமணம், இறப்புத் தகவல்களை ஏனைய அரச முகவர் நிலையங்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் என்பனவாகும். அத்துடன், பிரதேச மட்டத்திலான அலுவலகங்களில் தரவுத்தளங்களை நிறுவுவதன் மூலம் உரிய ஆவணங்களை விரைவாகத் தேடிக்கண்டறிதல், சான்றளிக்கப்பட்ட பிரதிகளை துரிதமாக விநியோகித்தல் மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் விநியோகிப்பதை பரவலாக்கல் என்பன இத்திட்டத்தின் ஏனைய நன்மைகளாகும்.
Online Land
ஒன்லைன் eBMD திட்டத்தின் ஊடாக, பிரஜைகள் ஒன்லைன் முறைமையூடாக சொத்து உறுதியாவணங்கள் மற்றும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளைக் கோருவதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
e-BMD திட்டத்தின் பின்னணி
பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்களைப் பதிவு செய்வதற்காக நாடு முழுவதிலும் பதிவுப் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு பதிவாளர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மூன்று பிரதிகளில் பதிவு செய்யப்படுவதுடன், அதன் மூலப்பிரதி பிரதேச செயலகத்திலும், இரண்டாவது பிரதி மத்திய ஆவணக்காப்பகத்திலும் பாதுகாக்கப்படுகின்றன. மூன்றாவது பிரதியானது, பிறப்பு அல்லது இறப்பின் போது அதனை அறிவிப்பவருக்கும், திருமணத்தின் போது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றது. பொதுமக்களின் தேவையின் பேரில் கோரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் சான்றிதழ் பிரதியொன்று விநியோகிக்கப்படும். சான்றிதழ் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு ஆவணத்தின் இலக்கம் மற்றும் பதிவு செய்த திகதி வழங்கப்படாவிடின், உரிய ஆவணத்தைத் தேடிப்பார்த்தே பிரதியை வழங்க வேண்டும். இதற்காக அந்த நிகழ்வு நடந்த காலப்பகுதியிலிருந்து 3 மாத காலத்திற்குரிய ஆவணங்களைப் பரிசோதிக்க வேண்டியிருப்பதால், உத்தியோகத்தர்கள் பக்கங்களைப் புரட்டி உரிய ஆவணத்தைத் தேடுவதற்கு அதிக நேரம் எடுக்கும்.
இந்த ஆவணத் தேடலுக்கான நேரத்தைக் குறைப்பதற்கும், ஆவணங்களின் பாதுகாப்பிற்கும் என பிறப்பு, இறப்பு மற்றும் திருமண ஆவணங்களை ஸ்கேன் செய்து தரவுக்கட்டமைப்பொன்றை நிறுவுவதன் அவசியத்தை இனங்கண்டு, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக e-BMD திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
e-BMD திட்டத்தின் ஆரம்பம்
2006 ஆம் ஆண்டில் ஒரு முன்னோடித் திட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு முதல் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் பழைய தரவுக்கட்டமைப்பினை நவீனமயப்படுத்தியதன் மூலம், முழு நாட்டிலும் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் எந்தவொரு மாவட்டத்திற்கும் உரிய பிறப்பு, திருமண, இறப்பு ஆவணத்தின் பிரதியைப் பெற்றுக்கொள்ளும் வசதி கிடைத்தது. இதுவரை பிரதான அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பழைய தரவுக்கட்டமைப்பு மற்றும் சுமார் 36 மில்லியன் ஸ்கேன் செய்யப்பட்ட பிறப்பு-திருமணம்-இறப்பு ஆவணங்கள், புதிய தரவுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டதோடு ICTA LGC 2.0 இல் நிறுவப்பட்டன.
அதற்கமைய, தற்போது 341 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள மேலதிக மாவட்டப் பதிவாளர் பிரிவுகளின் ஊடாக, புதிய தரவுக்கட்டமைப்பின் மூலம் பிறப்பு-திருமணம்-இறப்பு பிரதிகளை விநியோகிக்கும் செயன்முறை முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக, அனைத்து நில அளவைத் திணைக்களங்கள் மற்றும் வலய அலுவலகங்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சுஹுருபாய மத்திய ஆவணக்காப்பகம் மற்றும் பன்னிப்பிட்டிய புதிய மத்திய ஆவணக்காப்பகம் போன்ற இடங்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.