- முகப்பு
- எம்மைப் பற்றி
- தரவிறக்கம்
- சேவைகள்
- சிவில் பதிவு
- பிறப்பு பதிவு
- பதிவுசெய்யப்படாத பிறப்பு பதிவு
- மொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்
- விவாகப் பதிவு
- சான்றிதழ்களில் உள்ள பிழைகள் திருத்தம்
- மொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்
- விவாகரத்து சான்றிதழ் பெறல்
- இறப்பு பதிவு
- பதிவுசெய்யப்படாத இறப்பு பதிவு
- மொழிபெயர்ப்புகள் மற்றும் பிரதிகளை பெறுதல்
- காணி பதிவு
- Notary Registration
- Power of Attorney
- தலைப்பு பதிவு
- இ-சேவைகள்
- சிவில் பதிவு
- கட்டமைப்பு
- புள்ளிவிவரங்கள்
- தள வரைபடம்
- தொடர்புகளுக்கு
- நிகழ்நிலை சேவைகள்
- செய்தி மற்றும் நிகழ்வுகள்
- விலைமனுகளும் அறிவித்தல்களும்
- வினா விடை
- முகப்பு
- எம்மைப் பற்றி
தொலைநோக்கு
பதிவுசெய்வதன்மூலம் பொதுமக்களுக்கு அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு உதவுதல்.
செயற்பணி
எமது செயற்பணி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தல், இலங்கையின் உரித்துகளைப் பதிவுசெய்தல், விவாகம், பிறப்பு, இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல், பொதுமக்களின் முதன்மை மனை நிகழ்வுகளையும் அத்தகையை ஆவணங்களையும் பாதுகாத்தல், தேவைப்படும்போது அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் மற்றும் இத்தகைய பணிகள் ஊடாக பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவிசெய்தல் என்பவையாகும்.
- தரவிறக்கம்
- சேவைகள்
- கட்டமைப்பு
- புள்ளிவிவரங்கள்
- தள வரைபடம்
- தொடர்புகளுக்கு
- நிகழ்நிலை சேவைகள்
- செய்தி மற்றும் நிகழ்வுகள்
- விலைமனுகளும் அறிவித்தல்களும்
- வினா விடை
- இருக்குமிடம்:
- Announcement
- சேவைகள்
- தலைப்பு பதிவு
- Title Registration Statistics
- Services
Services
Notaries obtaining license at first time
Documents to be forwarded
- Duly clearly filled Application
- Certified copy of the certificate which is included into the profession of Attorney-at-law. This should be certified by the Registrar of the Supreme Court.
- Copy of the National Identity Card
- Receipt of the payment of Rs.3000 as license fee for obtaining notary license to the cashier of the department.
After submitting the above documents, relevant license will be issued.
Obtaining licenses for additional languagesclosed
- When applying for additional language, a credit pass should be obtained in G.C.E. (Ordinary Level) examination for the aforesaid language.
- Documents to be submitted
- Duly clearly filled application
- Copy of the original license
- Original copy and photocopy of the G.C.E (Ordinary Level) which is with a credit pass for the relevant language. (This copy should be certified as a true copy by a staff officer the Registrar General’s Department or Land Registrar)
- National Identity Card and a photocopy thereon
- If any difference in the examination certificate and notary license, an affidavit for proof it.
- If the new address is different from the address mentioned in the first certificate, request letter for include it.
- Receipt of the payment of Rs.3000 to the cashier of the Department for one language applied.
After submitting the above documents, relevant license will be issued.
Changing of Jurisdiction zone of a Notary Public
Documents to be submitted.
1.Duly clearly filled application
2. Original copy of the notary license
3.Land Registrar’s report on changing jurisdiction zone
4 Annual license obtained from High Court
5.Affidavit to proof so that any deed has not been written after handing over the application.
6.The receipt which was paid Rs.3000 as fees for one language to the shroff of the department.
Action will be taken to issue relevant licenses, after submitting above documents.
இ - சனத்தொகை
பிறப்பு, விவாகம், இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்வது பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பொறுப்பாகும். பதிவேடுகளில் பேணப்படுகின்ற பதிவுகள் எழுத்துறுமுறையில் பேணப்படுவதனால் ஏனைய அரச முகவர் நிலையங்களுக்கு அவறறைப் பெற முடியாது.அதன் விளைவாக பிரதிபண்ணுவதற்கு நேரமும் பணமும் செலவாகின்றது. ஒரே விதமான தனிப்பட்ட அடையாள எண்களை (PஐN) வழங்குதல், ஒவ்வொரு இலங்கைப் பிரசைபற்றிய தகவல்களைத் திரட்டுதல், நம்பகமான வினைத்திறன்மிக்க வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் முறைமையை உருவாக்குதல், சனத்தொகை பதிவைப் பயன்படுத்தி அரச நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நிலை அதிகரித்தல், வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவுசெய்தல என்பவை உட்பட சுகாதார புள்ளிவிபரங்கள் மற்றும் பிறப்பு நோய்நிலை பற்றிய பகுப்பாய்வு என்பவற்றை வழங்குதல் இதன் நோக்கமாகும். ந - சனத்தொகை முறைமை இந்த நோக்கங்களை நிறைவேற்றுகின்ற அதேநேரத்தில், பெற்றோர்கள் உறுதிப்படுத்துகின்ற தரவுகளின் சரியான தன்மையை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் ஏதேனும் பிரதேச செயலகத்தின் சான்றிதழ்களை தேடுதல் மற்றும் வழங்குதல், மொழிபெயர்ப்பு தேவைகளைக் குறைத்துக்கொள்ளுதல், வெளிநாடுகளில் கூட பயன்படுத்தக்கூடியதாக இருத்தல், பிரசைகளின் நடப்பு தகவல்களைப் பராமரித்தல் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் பிரசைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல். ஆகிய பயன்களை உறுதிப்படுத்துகின்றது.
இ - காணி
மூலதனத்தை உற்பத்திசெய்கின்ற ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு காணி சொந்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீண்டகால தடைகளாக இருக்கின்றன. நீண்ட தேடுதலில் உள்ள கஷ;டமும் காணி பதிவு அலுவலகங்களில் வேலைசெய்வதற்குப் போதியளவு இடவசதியில்லாமையும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒரு தடையாக இருக்கின்றது. மேற்குறிப்பிட்ட பிரச்சினைக்கு ந- காணி பதிவு அலுவலகம் ஒரு தீர்வை வழங்கியதன் விளைவாக காணி பதிவு அலுவலகங்களை இலகுவாக அணுகுதல், பதிவு தகவல்கள் மற்றும் பரம்பரை தகவல்கள் என்பவற்றை விருத்திசெய்யும் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களுக்காக ஆவணங்களைப் பாதுகாத்தல், விரைவான, செலவு குறைந்த, அதிக வசதியான சேவைகளை பொதுமக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் வழங்குதல், காணி பதிவு தகவல்களை மேம்படுத்துவதன் ஊடாக இலங்கையின் வியாபார குறிகாட்டியை உயர்த்துதல் என்பவை இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.
இ - பிறப்பு விவாகம் இறப்பு
பொதுமக்களுக்கு பிறப்பு, விவாகம், மரண பதிவுகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பிரதான செயற்பாடாகும். பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது இச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சரியான இலக்கம், திகதி, சம்பவம் நிகழ்ந்த காலம் போன்ற கட்டாய விபரங்கள் விண்ணப்பதாரருக்கு தெரியாதபோது எழுத்துறுமுறையில் தேடுவது மிகவும் கஷ;டமாகும். இத்தகைய கால விரயத்தை ஏற்படுத்துகின்ற தேடும் வேலைகளைத் தவிர்ப்பதற்காக ந- பிறப்பு விவாகம் இறப்பு கருத்திட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கம், தரவுதலத்தைப் பேணுதல், முறைமையின் ஊடாக சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் பிறப்பு, விவாகம், இறப்பு ஆகியவற்றின் பதிவுசெய்யப்பட்ட தகவல்களை ஏனைய அரச முகவர் நிலையங்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் என்பவையாகும். இவற்றைவிட விருத்திசெய்யப்பட்ட தரவுதலம், விரைவான தேடலை நடத்துதல், சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை விரைவாக வழங்குதல் மற்றும் பிரதேச மட்டத்தில் உள்ள அலுவலகங்களுக்கு தரவுத்தலங்களைப் புகுத்துவதன் மூலம் சான்றிதழ்களை விநியோகிக்கும் பணிகளைப் பன்முகப்படுத்துதல் போன்ற நன்மைகளும் கிட்டுகின்றது.
இ - உரித்து
பிம் சவிய
காணி சொந்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணி பதிவேடுகளை அணுகுவதில் உள்ள சிரமம் காரணமாக காணி பயன்பாட்டில் நீண்டகால தடைகளாக இருக்கின்றன. காணி சொந்தம் அல்லது எல்லைகள் என்பவற்றின் மூலம் எழுகின்ற அநாவசியமான பிணக்குகளைத் தவிர்ப்பதற்காக காணிப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் விருத்திசெய்வதற்கும் வலுவான மற்றும் தெளிவான காணி உரித்தை வழங்குவதற்காக இலங்கைக்கு உரித்து பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்கம் உறுதிப்படுத்திய உரித்து சான்றிதழை வழங்குவதற்கும் சிறந்த காணி முகாமைத்துவத்திற்கும் கணனியை அடிப்படையாகக்கொண்ட காணி தகவல் முறைமை உதவுகின்றது. அதன்படி பொதுமக்களுக்கு இலகுவான விரைவான வினைத்திறன்மிக்க பரிமாற்றல் முறையை முன்வைக்க முடியும்.
வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
- மரணம் நிகழ்ந்த 05 நாட்களுக்குள்கிராம உத்தியோகத்தருக்கு தெரிவித்தல் வேண்டும்.
- ஒவ்வொரு மரணத்தையும் பொறுத்தமட்டில், படிவம் B24 இன் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று கிராம உத்தியோகத்தரினால் இறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
- இறப்பு பதிவு செய்யப்படுவது இறப்பு நிகழ்ந்த இடத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரினால் ஆகும்.
- இறப்பு பதிவு படிவம் CR02 பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்..
- மரணத்தை அறிவிப்பதற்குத் தகுதியுள்ள நபர்கள்;
- மரணம் நிகழும் போது அருகிலிருந்த நெருங்கிய உறவினர்
- இறுதியாக நோயுற்றிருந்த போது பணிவிடை செய்த நெருங்கிய உறவினர்
- அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
- இறந்தவர் வசித்த பதிவாளர் பிரிவில் வசிக்கும் இறந்தவரின் உறவினர்
- அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
- இறக்கும் போது அருகிலிருந்த ஒருவர்
- மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
- மேற்குறித்த நபர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில்,
- இறந்த உடலை புதைப்பவர், தகனம் செய்பவர் அல்லது வேறு வகையில் அது தொடர்பான இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளும் நபர்.
- இறப்பு நிகழ்ந்த 03 மாதங்களுக்குள் மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
- இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் இறப்பைப் பதிவு செய்து கொள்ள முடியும், அதற்கு தாமதமான இறப்பு பதிவு செய்தல் விபரங்களைப் பார்வையிடவும்.
- அறிவிப்பாளருக்கு இலவசமாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
வைத்தியசாலையில் (அரசு அல்லது தனியார்) நிகழ்ந்த இறப்புகளை பதிவு. செய்தல்
- மரணம் நிகழ்ந்தது ஒரு வைத்தியசாலையில் என்றால், அந்த வைத்தியசாலைக்கரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு மரணத்தை பதிவு செய்வதற்கு அறிவித்தல் வேண்டும்.
- இறப்பை அறிவிப்பதற்கு தேவையான பிரகடன படிவத்தை (பதிவு செய்தல் CR02 படிவம்) பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
- இறப்பைப் பதிவுசெய்வதற்காகத் அறிவித்தல் வழங்குவதற்குத் தகுதியான நபர்கள்,
- இறந்தவரின் உறவினர்
- இறக்கும் போது அருகில் இருந்த நபர்
- வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் படிவம் CR02
- மரணம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை
- 03 மாத காலத்திற்குள் ஒரு மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
விண்ணப்பதாரர் இறப்புச் சான்றிதழை தோட்ட அதிகாரியின் அலுவலகத்திலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.பதிவுசெய்யப்பட்ட தோட்டத்தில் நிகழும் மரணத்தைப் பதிவு செய்தல்
வெளிநாட்டில் ஏற்பட்ட இலங்கையர் ஒருவரின் மரணத்தை வெளிநாட்டில் பதிவு செய்தல்
ஆகியன சமர்ப்பிக்கப்படல் வேண்டும். பதிவு செய்யப்படாத இறப்புக்களை பதிவு செய்தல்வெளிநாட்டில் மரணித்த ஒருவரின் மரணத்தை இந்நாட்டில் பதிவு செய்தல்
காலம் கடந்த இறப்புக்களை பதிவு செய்தல்
சிலர் காணாமல் போனதை மரணமாக நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அல்லது குறித்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழைப் பதிவு செய்வதற்கு உறவினர்கள் விரும்பாத காரணத்தினால், குறித்த காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எந்தவித சட்டபூர்வமான ஆவணங்களும் இல்லாத காரணத்தினால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அத்தகைய நபர்களுக்கு இறப்புச் சான்றிதழோ அல்லது கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழோ வழங்குவதற்கு பின்வரும் சட்டங்களின் மூலம் ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது அல்லது மோதல்களின் பின்னர் அல்லது அரசியல் அமைதியின்மை அல்லது சிவில் கலவரங்கள் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக காணாமல் போயுள்ளதாக அறிக்கையிடப்பட்ட நபர்கள் அல்லது யுத்த நடவடிக்கையின் போது காணாமல் போனவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆயுதப்படை அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்ற காணாமல் போனவர்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது பேரழிவுகள் காரணமாக காணாமல் போனவர்கள் போன்றவர்களின் இறப்பு பதிவுகள் மற்றும் விசாரணை ஆணைக்குழுக்கள் அல்லது விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் வெளிப்படுத்தும் தகவல்களின் அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைக்கலாம். கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழுக்காக விண்ணப்பிக்க முடியுமாயிருப்து காணாமற்போன நபரின் உறவினர்களால் ஆகும். குறிப்பு ; சட்டத்தின் பிரிவு 14 இல் வரையறுக்கப்பட்டுள்ள "உறவினர்" என்பது, விண்ணப்பிக்க வேண்டிய முறை காணாமல் போய் ஒரு வருடத்திற்கு மேல் கடந்துள்ள நபர்களுக்கு, "கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழ்" (COA) அல்லது இறப்புச் சான்றிதழின் (COD) பதிவுக்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டியது, காணாமல் போன நபர் கடைசியாக வசித்த அல்லது அவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள பிரதேசத்தின் மாவட்டப் பதிவாளரிடம் ஆகும். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய இதர ஆவணங்கள் (சட்டத்தின் பிரிவு 8 ஆ) சான்றுப்படுத்தப்பட்டபிரதிகளை மற்றும்மொழிபெயர்க்கப்பட்டபிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்
*அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Onlineமுறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.இறப்புச் சான்றிதழில் உள்ளிடப்பட்ட விபரங்களைத் திருத்துதல்
காணாமற்போனவர்களின் இறப்பினை பதிவு செய்தல் / கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழ் வழங்கல்
இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்
இறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்
திருமணங்களை (பொதுவான).பதிவு செய்தல்
- இருதரப்பினரும்முஸ்லிம்கள்அல்லாதவேறுஎந்தவொருஇனத்தை அல்லதுமதத்தைச்சேர்ந்தவர்களாயின், திருமண (பொதுவான) பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்.
- திருமண அறிவிப்பு இரண்டு பிரதிகளில் எழுதப்பட்டு சான்றுப்படுத்தப்பட்டு, பிரிவின் திருமணப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். (பெயர் மற்றும் பிறந்த திகதி என்பவற்றை சான்றுப்படுத்துவதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது ஏனைய ஆவணமொன்று)
- அறிவித்தலை சான்றுப்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றவர்கள்
- பிரிவின் திருமணப் பதிவாளர்
- சமாதான நீதவான்
- பிரசித்த நொத்தாரிசு
- அருட்தந்தை
- திருமண அறிவித்தலொன்றை வழங்குவதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
- தரப்பினர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் வதிவிடம் தொடர்பான தேவையை பூர்த்தி செய்தல்
- திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் குறித்த பிரிவில் வசித்திருத்தல்.
- திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் தனித்தனி பிரிவுகளில் வசித்திருத்தல்.
- தரப்பினர்களில் ஒரு தரப்பினர் திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
- தரப்பினர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் வதிவிடம் தொடர்பான தேவையை பூர்த்தி செய்தல்
- திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்களில் எந்தவொரு தரப்பினரும் இலங்கையில் வசித்திருக்கவில்லை என்றால், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
- இரு தரப்பினரும் கடைசி பிறந்த திகதியில் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல்.
- அவர்கள் திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட உறவு முறையினர்கள் அல்லாதவர்களாயிருத்தல்,
- ஏற்கனவே செல்லுபடியாகும் திருமணமொன்றை செய்து கொள்ளாதவர்களாயிருத்தல்
- திருமணத்தை (பொதுவான) பதிவு செய்வதற்காக திருமண அறிவித்தலை உரிய பதிவாளரிடம் கையளித்து 14 நாட்கள் கழிதல் வேண்டும்.
- அவ்வாறு 14 நாட்கள் கழிவதற்கு முன்னர் திருமணத்தை பதிவு செய்ய விரும்பினால், விஷேட அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் பதிவு செய்வதற்கு பதிவாளரிடம் கோரலாம்.
- இரண்டு பிரிவுகளின் திருமணப் பதிவாளர்களுக்கு திருமண அறிவித்தல்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பின், அறிவித்தல் பரிமாற்றம் மற்றும் பதிவாளரின் சான்றிதழை வழங்கியதன் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
- திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள இடமொன்றில் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனின், அதற்கான விஷேட அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதோடு, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
** மேற்கூறிய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ததன் பின்னர், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவாளரினால் திருமணம் பதிவு செய்யப்படுவதோடு, திருமணச் சான்றிதழின் மூன்றாவது பிரதி மணமகளிடம் ஒப்படைக்கப்படும்.
- திருமணத்தைபதிவுசெய்யும்போதுபதிவாளருக்குசெலுத்தவேண்டியகட்டணம்
இல.
விடயம்
யாருக்கு செலுத்தப்பட வேண்டும்
யாரால் செலுத்தப் பட வேண்டும்
தொகை (ரூ)
பணம் செலுத்தும் முறை
1
பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ திருமண அறிவித்தலை உள்ளிடுதல்
பதிவாளர்
விண்ணப் பதாரர்
120.00
பணமாக செலுத்துதல் வேண்டும்
2
மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது வேறு எந்த இடத்திலும் திருமண அறிவித்தலை உள்ளிடுதல்
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்
விண்ணப் பதாரர்
120.00
பணமாக செலுத்துதல் வேண்டும்
3
திருமண அறிவித்தல் தொடர்பாக பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்
பதிவாளர்
திருமண தரப்பினர்
120.00
பணமாக செலுத்துதல் வேண்டும்
4
திருமண அறிவித்தல் தொடர்பாக மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்
திருமண தரப்பினர்
120.00
பணமாக செலுத்துதல் வேண்டும்
5
பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்
பதிவாளர்
திருமண தரப்பினர்
900.00
பணமாக செலுத்துதல் வேண்டும்
6
மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்
திருமண தரப்பினர்
900.00
பணமாக செலுத்துதல் வேண்டும்
7
பிரிவு 38(1) அல்லது 38(2) இன் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல்
பதிவாளர்
திருமண தரப்பினர்
900.00
பணமாக செலுத்துதல் வேண்டும்
-----
-----
-----
8
பிரிவு 38(1) அல்லது 38(2) இன் கீழ் மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல்
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்
திருமண தரப்பினர்
900.00
பணமாக செலுத்துதல் வேண்டும்
9
பிரிவு 27(3) இன் கீழ் விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல்
அரசாங்கத்திற்கு
திருமண தரப்பினர்
120.00
பணமாக செலுத்துதல் வேண்டும்
10
பதிவு செய்யப்பட்ட வணக்கஸ்தலத்தில் நடைபெறும் திருமணத்தைப் பதிவு செய்தல்
மாவட்ட பதிவாளர்
திருமண தரப்பினர்
900.00
பணமாக செலுத்துதல் வேண்டும்
11
பிரிவு 38 1,2 இன் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணத்தை பதிவு செய்வதற்கான வீட்டு அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்
அரசாங்கத்திற்கு
திருமண தரப்பினர்
60.00
பணமாக செலுத்துதல் வேண்டும்
திருமணங்களை (பொதுவான).பதிவு செய்தல்
- கிறிஸ்தவ சமயத்தினர்கள்தங்கள்சொந்ததேவாலயங்களில்திருமணம்செய்துகொள்ளஅனுமதிக்கப்படுகிறார்கள்.
- திருமண அறிவித்தலை இரண்டு பிரதிகளில் எழுதி சான்றுப்படுத்தி, பிரிவின் திருமணப் பதிவாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும். (பெயர் மற்றும் பிறந்த திகதியை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது வேறு ஆவணமொன்று)
- அறிவித்தல்களை சான்றுப்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றவர்கள்
- பிரிவின் திருமணப் பதிவாளர்
- சமாதான நீதவான்
- பிரசித்த நொத்தாரிசு
- அருட்தந்தை
- திருமண அறிவித்தலொன்றை வழங்குவதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
- தரப்பினர்கள், குறித்த பிரிவில் வதிவிடம் தொடர்பான தேவையை பூர்த்தி செய்தல், அதாவது,
- திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் குறித்த பிரிவில் வசித்திருத்தல்.
- திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் தனித்தனி பிரிவுகளில் வசித்திருத்தல்.
- தரப்பினர்களில் ஒரு தரப்பினர் திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
- திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்களில் எந்தவொரு தரப்பினரும் இலங்கையில் வசித்திருக்கவில்லை என்றால், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
- இரு தரப்பினரும் கடைசி பிறந்த திகதியில் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல்.
- அவர்கள் திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட உறவு முறையினர்கள் அல்லாதவர்களாயிருத்தல்,
- ஏற்கனவே செல்லுபடியாகும் திருமணம் செய்து கொள்ளாதவர்களாயிருத்தல்
- விவாகரத்து பெற்றவர்கள் எனின், முற்றான கட்டளையின் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.
- இலங்கையின் திருமண (பொதுவான) சட்டத்தின் கீழ் திருமணம் செய்து, பின்னர் வெளிநாடொன்றில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் விவாகரத்து பெற்றிருப்பின். இலங்கையில் உள்ள குறிப்பிட்ட அதிகார வரம்பில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து விவாகரத்து தொடர்பான கட்டளையைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.
- தரப்பினர்கள், குறித்த பிரிவில் வதிவிடம் தொடர்பான தேவையை பூர்த்தி செய்தல், அதாவது,
- பதிவு செய்தல் கட்டணம் ரூ. 900.00. ஆகும்.
- பதிவாளர் அல்லது மேலதிக மாவட்ட பதிவாளரிடம் இருந்து “பதிவாளர் சான்றிதழ்” (பதிவுசெய்தல் B103 படிவம்) பெறப்பட வேண்டும்.
- குறித்த பதிவாளர் சான்றிதழை திருமணத்தை பதிவு செய்ய வேண்டிய தேவாலயத்தின் அருட்தந்தையிடம் சமர்ப்பிப்பதன் மூலம் தேவாலய திருமணத்தை நடத்தலாம்.
- அதன் பின்னர் அருட்தந்தை வழங்கிய அருட்தந்தை சான்றிதழை (B
இலங்கையர் ஒருவர் மற்றும் வெளிநாட்டவர் ஒருவர் இடையேயான திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறை
ஆண்/பெண்இருபாலர் சம்பந்தமான பின்வரும் விடயங்கள் தொடர்பான ஆவணங்கள்பதிவாளரிடம்சமர்ப்பிக்கப்படல்வேண்டும்.
- திருமணஅறிவித்தல் (2 பிரதிகளுடன்எழுதப்பட்டுசான்றுப்படுத்தப்பட்ட)
- வெளிநாட்டவர் இலங்கைக்குள் நுழைவதற்கு தேவையான விசா, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் அதன் பிரதி
- தனது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட குடியியல் நிலையை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் அசல் பிரதி மற்றும் விவாகரத்து/ விதவையின் விடயத்தில் அதனை உறுதிப்படுத்தும் சட்டரீதியான ஆவணங்கள்.
- வெளிநாட்டவரின் உடல்நிலையை சான்றுப்படுத்துவதற்கான ஒரு சுய பிரகடனம் (Health Declaration)
- பிறப்புச் சான்றிதழ்கள் (பெயர் மற்றும் வயதைஉறுதிப்படுத்துவதற்கு தேவைப்படின்) மற்றும் அதன் பிரதி
- பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம்.
பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறை
வெளிநாட்டவர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் அல்லது பின்னர், பின்வரும் ஆவணங்கள் தொடர்புடைய தரப்பினரால் (திருமணம் முடிக்கும் இருவரினால் அல்லது அவர்களது நெருங்கிய உறவினர்களால் மாத்திரம்) திணைக்களத்தின் சிவில் பதிவுப் பிரிவில் சமர்ப்பித்தல் வேண்டும்.
- விண்ணப்பப் படிவம்
- இலங்கைப் பிரசையின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படப் பிரதி
- வெளிநாட்டுப் பிரசையின் கடவுச் சீட்டின் புகைப்படப் பிரதி
- வெளிநாட்டுப் பிரசையின், குற்றச் செயலொன்றுக்கு குற்றவாளியாக்கப்படவில்லை எனும் பொலிஸ் சான்றிதழ் (6 மாதங்களுக்குள் பெறப்பட்ட)
- வெளிநாட்டவரின் சிவில் அந்தஸ்து பற்றிய சான்றிதழ் (06 மாதங்களுக்குள் பெறப்பட்ட) இதற்கு முன்னர் திருமணம் முடித்த நபரொருவர் எனின், விவாகரத்து சான்றிதழ் மற்றும் சிவில் நிலை தொடர்பான சான்றிதழ்).
- மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு ஆவணத்தினதும் 4 பிரதிகள் விகிதம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
- சிவில் அந்தஸ்து தொடர்பான சான்றிதழை உரிய நாட்டின் அரச நிறுவனமொன்றினால் வழங்கப்படுதல் வேண்டுமென்பதோடு, உரிய நாட்டின் அரச நிறுவனத்தினால் சிவில் அந்தஸ்து தொடர்பான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் மாத்திரமே சத்தியக் கடதாசி சமர்ப்பிக்க முடியும். சத்தியக் கடதாசியை குறித்த நாட்டின் அரச அலுவலகமொன்றினால் சான்றுப்படுத்தப்படுதல் வேண்டும்.
- இங்கு, வெளிநாட்டவர் வெளிநாட்டில் திருமணம் செய்து, வெளிநாட்டில் விவாகரத்து பெற்றிருந்தால், வெளிநாட்டு விவாகரத்து கட்டளை அல்லது இலங்கையில் திருமணம் செய்து, வெளிநாட்டில் விவாகரத்து செய்திருந்தால், வெளிநாட்டு விவாகரத்து கட்டளை மற்றும் இலங்கை விவாகரத்து கட்டளை என்பவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
- திருமணப் பதிவை பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவின் திருமணப் பதிவாளரின் மூலம் மேற்கொள்ளல் வேண்டும் என்பதோடு திருமணப் பதிவாளரின் மூலம் திருமணம் நடாத்தப்பட்டால், குறித்த பதிவாளர் மற்றும் உரிய பிரதேச செயலகத்தின் பெயரை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடல் வேண்டும்.
- விண்ணப்ப்ப் படிவத்தில், திருமணம் இடம்பெறும் திகதி, இடம் மற்றும் உரிய மாவட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடல் வேண்டும்.
- ஆவணங்களை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்த நாளிலிருந்து இசைவு அறிக்கையைப் பெறுவதற்கு 14 வேலை நாட்கள் எடுக்கும்.
- பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம், வழங்கப்பட்ட நாளிலிருந்து 03 மாதங்கள் செல்லுபடியாகும்.
- இந்த அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு கட்டணம் ஏதும் அறவிடப்பட மாட்டாது.
- திருமண அறிவித்தலைச் சமர்ப்பிக்கும் போது மேற்குறிப்பிட்ட ஆவணங்களை உரிய மேலதிக மாவட்டப் பதிவாளர்/ பிரிவின் திருமணப் பதிவாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
- இது தொடர்பான இல. 18/2021 மற்றும் 2021.10.18ம் திகதிய சுற்றறிக்கை 2022.01.01ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அதன் திருத்தப்பட்ட 18/2021(1)ம் இலக்க சுற்றறிக்கை 2022.08.01ம் திகதி முதல் செயற்பாட்டில் உள்ளது.
கண்டிய சட்டத்தின் கீழ் திருமணங்களை பதிவு செய்தல்
- கண்டியசட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொள்ள முடியமாயிருப்பது, கண்டிய சட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிங்களவர்களுக்கு மாத்திரமேயாகும்.
- கண்டிய திருமணச் சட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள்
- மத்திய மாகாணம்
- வட மத்திய மாகாணம்
- ஊவா மாகாணம்
- சப்ரகாமுவ மாகாணம்
- வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு வவுனியாவின் செட்டிக்குளம் கோறளை மற்றும் தெற்கு கிழக்குமலை கோறளை
- கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிந்தென்ன பற்று, வேகம்பற்று மற்றும் பானம பற்று மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் கடுக்குளம் பற்று.
- வடமேல் மாகாணத்தின் குருணாகல் மாவட்டம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் தமிழ் ஹத்பத்துவ.
- கண்டிய சட்டத்தின் கீழ் திருமணங்களை பதிவு செய்வதற்கான அதிகாரம் மேற்குறித்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட திருமணப் பதிவாளர்களுக்கு மாத்திரமே உள்ளது.
- இந்த சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்வதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
- சம்பந்தப்பட்ட பிரிவில் இரு தரப்பினரின் வசிப்பிடம் தொடர்பான தேவைப்பாடு
- திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் குறித்த பிரிவில் வசித்திருத்தல்.
- திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் தனித்தனி பிரிவுகளில் வசித்திருத்தல்.
- தரப்பினர்களில் ஒரு தரப்பினர் திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
- திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்களில் எந்தவொரு தரப்பினரும் இலங்கையில் வசித்திருக்கவில்லை என்றால், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
- இரு தரப்பினரும் கடைசி பிறந்த திகதியில் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல்.
- இரு தரப்பினரும் திருமணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட உறவு முறையினர்கள் அல்ல என (1952ம் ஆண்டின் 44ம் இலக்க கண்டிய விவாகரத்துச் சட்டத்திற்கு அமைய)
- ஏற்கனவே செல்லுபடியாகும் திருமணம் செய்துகொள்ளவில்லை என
- சம்பந்தப்பட்ட பிரிவில் இரு தரப்பினரின் வசிப்பிடம் தொடர்பான தேவைப்பாடு
- மேற்கூறிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால், முறையாக பூர்த்தி செய்யப்பட்டு சான்றுப்படுத்தப்பட்ட திருமண அறிவித்தலை இரண்டு பிரதிகளில் பிரதேச திருமணப் பதிவாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
- திருமண அறிவித்தலை சான்றுப்படுத்துவதற்குரிய அதிகாரம் குறித்த பிரிவின் திருமணப் பதிவாளருக்கே உண்டு. (பெயர் மற்றும் வயதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது வேறு ஆவணமொன்று)
- திருமண அறிவித்தல் கிடைத்த 14 நாட்களின் பின்னர் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
- திருமண அறிவித்தலை கையளித்து 14 நாட்களுக்கு முன்னர் திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமெனின், உரிய கட்டணத்தைச் செலுத்தி விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
- இரண்டு பிரிவுகளின் திருமணப் பதிவாளர்களுக்கு திருமண அறிவித்தல்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பின், அறிவித்தல் பரிமாற்றம் செய்துகொள்ளப் பட்டதன் பின்னர் மற்றும் பதிவாளரின் சான்றிதழை வழங்கியதன் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
- திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள இடமொன்றில் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனின், அதற்கான விஷேட அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதோடு, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
** மேற்கூறிய விடயங்களை பூர்த்தி செய்ததன் பின்னர், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவாளரினால் திருமணம் பதிவுசெய்யப்படுவதோடு, திருமணச் சான்றிதழின் மூன்றாவது பிரதி மணமகளிடம் ஒப்படைக்கப்படும்.
கண்டிய திருமணங்களை பதிவு செய்வதற்கு பதிவாளர்களினால் அறவிடப்படும் கட்டணம்
இல. |
விடயம் |
யாருக்கு செலுத்தப்பட வேண்டும் |
யாரால் செலுத்தப் பட வேண்டும் |
தொகை (ரூ) |
பணம் செலுத்தும் முறை |
1 |
பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ திருமண அறிவித்தலை உள்ளிடுதல் |
பதிவாளர் |
விண்ணப் பதாரர் |
120.00 |
பணமாக செலுத்துதல் வேண்டும் |
2 |
மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது வேறு எந்த இடத்திலும் திருமண அறிவித்தலை உள்ளிடுதல் |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் |
விண்ணப் பதாரர் |
120.00 |
பணமாக செலுத்துதல் வேண்டும் |
3 |
திருமண அறிவித்தல் தொடர்பாக பதிவாளரின் சான்றிதழை வழங்குதல் |
பதிவாளர் |
திருமண தரப்பினர் |
120.00 |
பணமாக செலுத்துதல் வேண்டும் |
4 |
திருமண அறிவித்தல் தொடர்பாக மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் சான்றிதழை வழங்குதல் |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் |
திருமண தரப்பினர் |
120.00 |
பணமாக செலுத்துதல் வேண்டும் |
5 |
பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல் |
பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாக செலுத்துதல் வேண்டும் |
6 |
மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல் |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாக செலுத்துதல் வேண்டும் |
7 |
பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல் |
பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாக செலுத்துதல் வேண்டும் |
----- |
----- |
----- |
|||
8 |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல் |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாக செலுத்துதல் வேண்டும் |
9 |
19 வது பிரிவின் கீழ் அறிவித்தல் தொடர்பாக விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் விண்ணப்பம் |
பதிவாளர் |
விண்ணப்பதாரர் |
120.00 |
பணமாக செலுத்துதல் வேண்டும் |
10 |
19 வது பிரிவின் கீழ் திருமண அறிவித்தல் தொடர்பாக விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் விண்ணப்பம் |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் |
விண்ணப்பதாரர் |
120.00 |
பணமாக செலுத்துதல் வேண்டும் |
11 |
24 வது பிரிவின் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணத்தை பதிவு செய்வதற்கான வீட்டு அனுமதிப்பத்திரத்தை வழங்குதல் |
அரசாங்கத்திற்கு |
திருமண தரப்பினர் |
60.00 |
பணமாக செலுத்துதல் வேண்டும் |
முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்தல்
- முஸ்லிம்திருமணம்மற்றும்விவாகரத்துசட்டத்தின்கீழ், இலங்கையில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம்.
- இத்திருமணங்களைப் பதிவு செய்வதற்காக திணைக்களத்தால் முஸ்லிம் திருமணப் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- திருமணம் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் நிக்காஹ் சடங்குகள் செய்யப்படுகின்றன.
- நிக்காஹ் சடங்குகளின் பின்னர், நிக்காஹ் சடங்குகளை நடாத்திய மௌலவியினால், மணமகளின் வலி, மணமகன் மற்றும் இரண்டு ஆண் சாட்சிகள் சகிதம் முஸ்லிம் திருமணப் பதிவாளரைச் சந்தித்து திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.
- எனினும், அந்த நேரத்தில் திருமணத்தை பதிவு செய்ய முடியாவிட்டால், தாமதமான முஸ்லிம் திருமணமாக மீள்பதிவு செய்வதற்கு உரிய முஸ்லிம் பதிவாளருக்கு உத்தரவிடுவதற்கு உரிய பிரதேச செயலகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் (பிரதேச செயலாளர்) அவர்களுக்கு அதிகாரம் உண்டு.
சான்றிதழில் உள்ள பிழைகளை திருத்தியமைத்தல்வெளிநாட்டு திருமணங்களை பதிவு செய்தல் (திருமண பதிவுகள் இலங்கை தூதரகங்கள் அல்லது இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயங்களில் மேற்கொள்ளப்படும் எனின்)
பொதுவான திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்
கண்டிய திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்
விவாகரத்தைப் பெற்றுக் கொள்ளல்
முஸ்லிம் திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்
கண்டிய திருமணமொன்றை விவாகரத்து செய்தல்
விவாகரத்துசான்றிதழைப் பெற்றுக் கொள்ளல்முஸ்லிம் திருமணமொன்றை விவாகரத்து செய்தல்
கண்டிய திருமண விவாகரத்துச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்
திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்முஸ்லிம் திருமண விவாகரத்துச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்
** அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Onlineமுறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக் கொள்ளல்
தற்போது ஒரு நாள் சேவை இல்லைதிருமணச்சான்றிதழ்களின்மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப்பெற்றுக் கொள்ளல்
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் பிரதிகளை வழங்குதல்
- நாடளாவியரீதியில்உள்ள 334 பிரதேச செயலகங்களின் கீழ் அமைந்துள்ள ஒவ்வொரு பதிவாளர் பிரிவிலும் நியமிக்கப்பட்டுள்ள பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பதிவாளர்களினால் இந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
- சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் பிரதேச செயலகங்களினால் விநியோகிக்கப்படுகின்றன.
அலுவலக நேரம்
- பிரதேசசெயலகங்களில்அமைந்துள்ளமாவட்டபதிவாளர்பிரிவு கிழமை நாட்களில் மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 3.45 வரை திறந்திருக்கும். (பணம் செலுத்துமிடங்கள் பி.ப. மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.)
- சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்காக அலுவலகம் திறக்கப்படாது.
- பிரிவுப்பதிவாளர்களின்அலுவலகநேரம்காலை மணி முதல் பிற்பகல் மணி வரையாகும்.
பிறப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படுவது குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்தினை அடிப்படையாகக் கொண்டாகும்.
1. பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்தல் வேண்டும். 2, ஒவ்வொரு பிறப்பு சம்பந்தமாகவும் அந்த பிறப்பு தொடர்பான படிவம் B23 இன் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கையை கிராம உத்தியோகத்தரினால் பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்புதல் வேண்டும்.. 3. பிறப்பு நிகழ்ந்த இடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் பிரிவின் பதிவாளரினால் பிறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. (பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் பட்டியல்) 4, முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் CR01 படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் கையளித்தல் வேண்டும். குறித்த CR01 படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து அல்லது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். 5. பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதி பெற்ற நபர்கள் 6. பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதியான நபர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் 7. பெற்றோர் திருமணமாகாதவர்களாக இருந்தால், தந்தையின் விபரங்களை உள்ளிடுவதற்காக பெற்றோர் இருவரும் பிறந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் செல்ல வேண்டும். 8. பிறந்த 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். பிறந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் பிறப்பினை பதிவு செய்து கொள்ள முடியுமென்பதோடு அதற்கு தாமதமான பிறப்பு பதிவு செய்தல் விபரங்களைப் பார்வையிடவும். 9, பிறப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர், தகவல் கொடுப்பவருக்கு பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று இலவசமாக வழங்கப்படும். 10. பிறந்த திததி மற்றும் இடம் ஆகியவை தாய்க்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் மாத்திரம் கூட (சில சமயங்களில் அதைவிடக் குறைவான தகவல்கள் அளிக்கப்பட்ட போதிலும்) பிறப்பினை பதிவு செய்ய முடியும். அங்கு வழங்கப்படும் தகவல்கள் தொடர்பான நிரல்கள் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். *நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். (1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
*நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். (1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
வைத்தியசாலையொன்றில் (அரசாங்க அல்லது தனியார்) நிகழும் பிறப்பினை பதிவு. செய்தல்
** நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். (1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)பதிவுசெய்யப்பட்ட தோட்டமொன்றில் நிகழும் பிறப்பினை பதிவு. செய்தல்
வெளிநாடுகளில் நிகழும் பிறப்புகளை அந்தந்த நாட்டில் பதிவு செய்து கொள்ளல்
தேவையான ஆவணங்கள் **அதற்குத் தேவையான தகவல்களைப் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவறையின் பிரதிப் பதிவாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தொலைபேசி இல. +94 112 329 773 அல்லது +94 112 433 075 / 071 8255066 பதிவு செய்யப்படாத பிறப்பினை பதிவு செய்தல்வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை இந்த நாட்டில் பதிவு செய்தல்
இந்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், தெரிந்த விபரங்களை உள்ளடக்கிய பிரகடனப் பத்திரம் மற்றும் உறுதிமொழிப் பத்திரம்காலம் கடந்த பிறப்புகளை பதிவு செய்தல்
அனுமான வயது சான்றிதழ்களை வழங்குதல்
ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். தந்தை மரணித்திருப்பின் அவரது இறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை பெற்றுக்கொள்ளல். சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை பெற்றுக்கொள்ளல்.பிறப்புச் சான்றிதழில் உள்ளிடப்பட்ட விபரங்களைத் திருத்துதல்
ஒரு குழந்தையை தத்தெடுத்தல்
** அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Online முறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்
பிறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்
News & Events
- இ-லேண்ட் மென்பொருளை நிறுவுவதற்கு முன்னர் பருத்திதுறை, மன்னார் மற்றும் கிளிநொச்சியில் உள்ள காணி பதிவாளர் அலுவலகங்களை கண்காணித்தல்
- யாழ் காணி பதிவாளர் அலுவலகத்திற்கு இ - காணி மென்பொருள் நிறுவல்
- Training programme of stationary functions related to middle officers who working in the Land Registries at Western Province
- නවක නිලධාරින් සඳහා මෘදුකාංගය මගින් හිමිකම් ලියාපදිංචි කිරීම පුහුණු කිරීම. හිමිකම් ලියාපදිංචි කිරීමේ වැඩසටහන
- செயல்படும் நிலப் பதிவாளர்களுக்கான பயிற்சித் திட்டம்
முகவரி
தலைமை பதிவாளர் திணைக்களம்
234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.
தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489
மின்னஞ்சல்
info@rgd.gov.lk