வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்

  • மரணம் நிகழ்ந்த 05 நாட்களுக்குள்ிராம உத்தியோகத்தருக்கு தெரிவித்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு மரணத்தையும் பொறுத்தமட்டில், படிவம் B24 இன் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று கிராம உத்தியோகத்தரினால் இறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
  • இறப்பு பதிவு செய்யப்படுவது இறப்பு நிகழ்ந்த இடத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரினால் ஆகும்.
  • இறப்பு பதிவு படிவம் CR02 பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்..
  • மரணத்தை அறிவிப்பதற்குத் தகுதியுள்ள நபர்கள்;
    • மரணம் நிகழும் போது அருகிலிருந்த நெருங்கிய உறவினர்
    • இறுதியாக நோயுற்றிருந்த போது பணிவிடை செய்த நெருங்கிய உறவினர்
    • அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
      • இறந்தவர் வசித்த பதிவாளர் பிரிவில் வசிக்கும் இறந்தவரின் உறவினர்
    • அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
      • இறக்கும் போது அருகிலிருந்த ஒருவர்
      • மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
    • மேற்குறித்த நபர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில்,
      • இறந்த உடலை புதைப்பவர், தகனம் செய்பவர் அல்லது வேறு வகையில் அது தொடர்பான இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளும் நபர்.
  • இறப்பு நிகழ்ந்த 03 மாதங்களுக்குள் மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
  • இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் இறப்பைப் பதிவு செய்து கொள்ள முடியும், அதற்கு தாமதமான இறப்பு பதிவு செய்தல் விபரங்களைப் பார்வையிடவும்.
  • அறிவிப்பாளருக்கு இலவசமாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)

வைத்தியசாலையில் (அரசு அல்லது தனியார்) நிகழ்ந்த இறப்புகளை பதிவு. செய்தல்

  • மரணம் நிகழ்ந்தது ஒரு வைத்தியசாலையில் என்றால், அந்த வைத்தியசாலைக்கரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு மரணத்தை பதிவு செய்வதற்கு அறிவித்தல் வேண்டும்.
  • இறப்பை அறிவிப்பதற்கு தேவையான பிரகடன படிவத்தை (பதிவு செய்தல் CR02 படிவம்) பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
  • இறப்பைப் பதிவுசெய்வதற்காகத் அறிவித்தல் வழங்குவதற்குத் தகுதியான நபர்கள்,
    • இறந்தவரின் உறவினர்
    • இறக்கும் போது அருகில் இருந்த நபர்
    • வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் படிவம் CR02
    • மரணம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை
  • 03 மாத காலத்திற்குள் ஒரு மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)

பதிவுசெய்யப்பட்ட தோட்டத்தில் நிகழும் மரணத்தைப் பதிவு செய்தல்

  • இறப்பு நிகழ்ந்த 24 மணிநேரத்திற்குள், பின்வரும் தகுதி வாய்ந்த நபர்களால் இறப்பு தொடர்பாக தோட்ட அதிகாரிக்குத் தெரிவித்தல் வேண்டும்.
  • அறிவித்தல் வழங்குவதற்குத் தகுதியான நபர்கள்;
    • இறந்தவரின் உறவினர்
    • இறக்கும் போது அருகில் இருந்த நபர்
    • மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
    • மரணம் தொடர்பான இறுதிச் சடங்குகளை மேற்கொள்பவர்கள்
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள் இருப்பின்
    • இறந்தவரின் மருத்துவ அமர்வு அறிக்கைகள் (இருப்பின்)
  • தோட்ட அதிகாரியினால் இறப்பு அறிக்கையைக் குறிப்பிட்டுசான்றுப்படுத்தப்பட்ட தோட்ட அதிகாரி இறப்பு அறிக்கையுடன் (பதிவு செய்தல் படிவம் CR02) மாவட்ட வைத்திய அதிகாரி ஊடாக பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • மேலதிக மாவட்டப் பதிவாளரால் இறப்பு பதிவு செய்யப்பட்டு, இறப்புச் சான்றிதழ் உரிய தோட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பதாரர் இறப்புச் சான்றிதழை தோட்ட அதிகாரியின் அலுவலகத்திலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் ஏற்பட்ட இலங்கையர் ஒருவரின் மரணத்தை வெளிநாட்டில் பதிவு செய்தல்

  • இறக்கும் போது இலங்கையர்அல்லதுஇரட்டைக்குடியுரிமைபெற்றவரின்மரணத்தைவெளிநாட்டில்பதிவுசெய்து கொள்ளலாம்.
  • இறப்பு நிகழ்ந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் / உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் மரணம் பதிவு செய்யப்படுகின்றது.
  • இறப்பு தொடர்பாக அறிவிப்பிற்குத் தேவையான அறிவிப்புப் படிவம் இலங்கைத் தூதரகம் / உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
  • இறப்பைப் பதிவுசெய்வதற்காக அறிவித்தல் விடுப்பதற்குத் தகுதியான நபர்கள்:
    • இறந்தவரின் நெருங்கிய உறவின்
    • இறக்கும் போது அருகில் இருந்த நபர்
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (அசல் மற்றும் நகல் பிரதிகளின் தொகுப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்):
    • இலங்கைப் பிரசை அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் (விசா/ இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ்)
    • இறந்தவரின் கடவுச் சீட’டு (இறக்கும் போது செல்லுபடியான)
    • குறித்த நாட்டில் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்
    • மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடும் வைத்தியசாலை அறிக்கை
    • இறந்தவரின் பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • அறிவிப்பாளரின் உறவு முறையை நிரூபிக்கும் ஆவணம் (தேவைக்கேற்ப பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்)
  • அரசாங்கக் கட்டணமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் நிர்ணயிக்கப்படும் தொகையை அந்தந்த நாட்டின் செல்லுபடியாகும் நாணயத்தில் செலுத்தப்படல் வேண்டும்.

வெளிநாட்டில் மரணித்த ஒருவரின் மரணத்தை இந்நாட்டில் பதிவு செய்தல்

  • ஒரு வருட காலத்திற்குள் தொடர்புடைய நாட்டின் தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் உரிய அரசாங்கக்கட்டணத்தைச்செலுத்திமரணத்தைப்பதிவுசெய்துகொள்ளமுடியாது போய் விடின், ஒரு வருட காலத்தின் பின்னர் காலம் கடந்த மரணமாக பதிவு செய்து கொள்வதற்கு பின்வரும் ஆவணங்களை மரணம் நிகழ்ந்த நாட்டின் தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அதனை குறித்த தூதரகத்தால் மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
  • மேலும், மரணம் வெளிநாட்டில் உள்ள தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பதிவு செய்யப்படாவிட்டால், மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் மரணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
  • மரணம் தொடர்பாக அறிவிப்பதற்குத் தேவையான பிரகடனப் படிவம் மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்தின் Consular பிரிவில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
  • இறந்தவர் இலங்கையர் அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  • இறந்தவரின் வாழ்க்கைத் துணை, தாய், தந்தை, சகோதரர், பிள்ளை அல்லது அவ்வாறான யாரும் இல்லாத பட்சத்தில் அது தொடர்பாக ஆர்வமுள்ள தரப்பினருக்கு இறப்பைப் பதிவு செய்வதற்கான அறிவிப்பாளராக முன்வரலாம்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (அசல் மற்றும் நகல் பிரதிகளின் தொகுப்பு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்):
    • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனப் படிவம்
    • வெளிநாட்டு இறப்புச் சான்றிதழ்
    • இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் குறிப்பிடப்படாவிட்டால் இறப்புக்கான காரணத்தைக் குறிப்பிடும் அறிக்கை
    • இறந்தவரின் பிறப்புச் சான்றிதழ்
    • இறந்தவரின் கடவுச்சீட்டு
    • உடல் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தால் கார்கோ பற்றுச் சீட்டு
    • அறிவிப்பாளரின் உறவை நிரூபிக்கும் ஆவணம் (தேவையாயின் பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்)
    • இறுதிக் கிரியைகள் இலங்கையில் மேற்கொள்ளப்படின் போக்குவரத்து விலைப்பட்டியல்
    • வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம் (இலங்கையில் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுமாயின்)
    • அறிவிப்பாளரின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படப் பிரதி
    • அறிவிப்பாளரின் முகவரி மற்றும் உரிய முத்திரை ஒட்டப்பட்ட 9*4 அளவிலான கடித உறை
    • வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் Consular பிரிவிற்கு பதிவுக் கட்டணமாக ரூ.8,180/- செலுத்தி பெற்றுக் கொள்ளப்பட்ட பற்றுச் சீட்டு.
    • சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் அல்லாத வேறு மொழிகளில் உள்ள ஆவணங்களின் மொழிபெயர்ப்பு

ஆகியன சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

  • இது தொடர்பான தகவல்களை பதிவாளர் நாயகம் தணைக்களத்தின் மத்திய ஆவணக் காப்பகத்தின் பிரதிப் பதிவாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தொலைபேசி இல. ; +94 112 329 773 அல்லது +94 112 433 075/ 071 8255066

பதிவு செய்யப்படாத இறப்புக்களை பதிவு செய்தல்

காலம் கடந்த இறப்புக்களை பதிவு செய்தல்

  • மரணம் நிகழ்ந்து மூன்றுமாதங்களுக்குள்இறப்புபதிவுசெய்யப்படாமல்இருந்தால், அத்தகைய மரணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
  • மரணம் நிகழ்ந்து 25 வருடங்களுக்கு மேற்படாத காலத்தினுள் மரணம் தொடர்பான பிரகடனப் படிவம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். (திடீர் மரணம் தவிர)
  • பிரகடனப் பத்திரம் மரணம் நிகழ்ந்த பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • பிரகடனப் பத்திரத்தை முன்வைக்க தகுதிபெற்ற நபர்கள்
    • இறக்கும் போது உடனிருந்த அல்லது இறப்பெய்தியவர் இறுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த போது அவருக்கு பணிவிடை செய்த நெருங்கிய உறவினர்.
    • ஆர்வமுள்ள ஏனையவர்கள்
  • அறிவிப்புப் படிவத்திற்கான கட்டணம் ரூ. 60.00 ஆகும்.

இறப்புச் சான்றிதழில் உள்ளிடப்பட்ட விபரங்களைத் திருத்துதல்

  • பிரகடனப் படிவத்தை மரணம்நிகழ்ந்த பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • பின்வரும் நபர்களில் ஒருவரால் பிரகடனம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    • சம்பவத்தை பதிவு செய்வதற்கு தகவல் வழங்கியவர்
    • விடயத்தைப் பற்றிய உண்மையை அறிந்த நம்பகமான நபர்
  • இறப்புச் சான்றிதழின் பதிவுத் திகதி தவிர்ந்த அனைத்து தகவல்களையும் திருத்தலாம்.
  • பிரகடனப் பத்திரத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ. 60.00 ஆகும்.
  • பிரகடனப் பத்திரத்தில் கூறப்பட்ட கோரிக்கையின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக  பெற்றுக்கொள்ளத்தக்க எழுத்துப்பூர்வ ஆதாரங்களை முன்வைத்தல் வேண்டும்.

காணாமற்போனவர்களின் இறப்பினை பதிவு செய்தல் / கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழ் வழங்கல்

சிலர் காணாமல் போனதை மரணமாக நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அல்லது குறித்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழைப் பதிவு செய்வதற்கு உறவினர்கள் விரும்பாத காரணத்தினால், குறித்த காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எந்தவித சட்டபூர்வமான ஆவணங்களும் இல்லாத காரணத்தினால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

அத்தகைய நபர்களுக்கு இறப்புச் சான்றிதழோ அல்லது கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழோ வழங்குவதற்கு பின்வரும் சட்டங்களின் மூலம் ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

  • 2010 ம் ஆண்டின் 19 ம் இலக்க இறப்புகளை பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம்
  • 2016 ம் ஆண்டின் 16 ம் இலக்க இறப்புகளைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது அல்லது மோதல்களின் பின்னர் அல்லது அரசியல் அமைதியின்மை அல்லது சிவில் கலவரங்கள் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக காணாமல் போயுள்ளதாக அறிக்கையிடப்பட்ட நபர்கள் அல்லது யுத்த நடவடிக்கையின் போது காணாமல் போனவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆயுதப்படை அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்ற காணாமல் போனவர்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது பேரழிவுகள் காரணமாக காணாமல் போனவர்கள் போன்றவர்களின் இறப்பு பதிவுகள் மற்றும் விசாரணை ஆணைக்குழுக்கள் அல்லது விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் வெளிப்படுத்தும் தகவல்களின் அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைக்கலாம்.

கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழுக்காக விண்ணப்பிக்க முடியுமாயிருப்து காணாமற்போன நபரின் உறவினர்களால் ஆகும்.

குறிப்பு ; சட்டத்தின் பிரிவு 14 இல் வரையறுக்கப்பட்டுள்ள "உறவினர்" என்பது,

  • வாழ்க்கைத் துணை;
  • தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், திருமணமாகாத பெற்றோரின் பிள்ளைகள் அல்லது மாற்றாந்தாய் பிள்ளைகள் உட்பட குழந்தைகள்;
  • பெற்றோர், மாற்றாந்தாய், மாற்றாந்தகப்பன், தத்தெடுக்கப்பட்ட நபர்;
  • உடன்பிறந்த அல்லது ஒருவழி சகோதரர்கள் (வேறு தாய்/வேறு தந்தைக்குப் பிறந்த சகோதரர்கள்) அல்லது சகோதரிகள் அல்லது தத்தெடுக்கப்பட்ட சகோதரர்கள் அல்லது சகோதரிகள்;
  • மாமனார், அத்தைமார், மைத்துனர்கள், அண்ணிமார், மருமகன்கள், மருமகள்கள்;
  • பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் தாத்தாமார் மற்றும் பாட்டிமார்

விண்ணப்பிக்க வேண்டிய முறை

காணாமல் போய் ஒரு வருடத்திற்கு மேல் கடந்துள்ள நபர்களுக்கு, "கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழ்" (COA) அல்லது இறப்புச் சான்றிதழின் (COD) பதிவுக்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டியது, காணாமல் போன நபர் கடைசியாக வசித்த அல்லது அவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள பிரதேசத்தின் மாவட்டப் பதிவாளரிடம் ஆகும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய இதர ஆவணங்கள் (சட்டத்தின் பிரிவு 8 ஆ)

  • உறுதிமொழி (இணைப்பு
  • கிராம உத்தியோகத்தர் அறிக்கை (இணைப்பு 03)
  • கோரிக்கையை உறுதிப்படுத்தும் ஏனைய சான்றுகள்
  • ஆணைக்குழுக்களின் தீர்மானத்தின் சான்றுப்படுப்பட்ட பிரதி

சான்றுப்படுத்தப்பட்டபிரதிகளை மற்றும்மொழிபெயர்க்கப்பட்டபிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

  • இறப்புச்சான்றிதழின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியது மரணம் நிகழ்ந்த இடத்திற்குரிய பிரதேசசெயலகத்திலாகும். குறித்த சான்றிதழ் தரவுஅமைப்பில்இருப்பின், உங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். 1960.01.01 முதல் 2020.12.31 வரையிலான சான்றிதழ்களின் பிரதிகளை தரவு அமைப்பு ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம். (தரவு அமைப்பில் உள்ளதா என்பதை அருகிலுள்ள பிரதேச செயலகத்திலிருந்து பரீட்சித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்)
  • தேவையான விண்ணப்பப் படிவத்தை எந்தவொரு பிரதேச செயலகத்தினதும் மாவட்ட பதிவாளர் பிரிவிலிருந்தும் / இணையதளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
  • அறவிடப்படும் கட்டணம்,
    • இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி தெரிந்திருப்பின் ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.120.00 ஆகும்.
    • இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி தெரியவில்லை எனின், ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.250.00 ஆகும் (இரண்டு ஆண்டுகளுக்கு மிகைப்படாமல் ஆவணங்களைத் தேட வேண்டியுள்ளதால்)
  • உரிய கட்டணத்தை பிரதேச செயலகத்தில் அல்லது பதிவாளர் நாயகத்தின் இலங்கை வங்கியின் (புறக்கோட்டை கிளை) கணக்கு இலக்கம் 7039827 இற்குச் செலுத்தி, வங்கிச் சீட்டு (Bank Slip) மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து சான்றிதழின் பிரதியைக் கோரலாம்.
  • இறப்புச் சான்றிதழை தபால் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனின், சுயமுகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட உறையை மேலே குறிப்பிட்டவாறு கட்டணம் செலுத்திய பற்றுச் சீட்டு மற்றும் விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து சமர்ப்பித்தல் வேண்டும்.
  • இறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால், செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப தொடர்புடைய இறப்புச் சான்றிதழின் கோரப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை வழங்கப்படும் என்பதோடு இறப்பு பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் அது தொடர்பாக படிவம் B38 மூலம் தெரிவிக்கப்படும்.

*அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Onlineமுறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.

இறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

  • இந்தச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றும் திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் தொடர்பான விபரங்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.. மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றும் அலுவலகங்கள்
  • பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்புகள்
    • சிங்களம் – ஆங்கிலம்
    • ஆங்கிலம் – சிங்களம்
    • தமிழ் – ஆங்கிலம்
    • ஆங்கிலம் – தமிழ்
  • விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் நேரம் : வாரத்தின் அலுவலக நாட்களில் மு.ப. 9.00 மணி. – பி.ப. 2.30 (சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் திறக்கப்படாது.)
  • விண்ணப்பப் படிவத்தை மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலிருற்தோ அல்லது இணையதளத்திலிருந்தோ பெற்றுக் கொள்ளலாம்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
    • மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஆவணத்தின் அசல் பிரதி அல்லது பிரதேச செயலகத்திலிருந்து பெறப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • தபால் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனின், மேற்குறித்த தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக சுய முகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட கடித உறையொன்று
  • மொழிபெயர்ப்பு கட்டணம்
    • ஒரு மொழிபெயர்ப்புப் பிரதிக்கு ரூ. 600.00.
    • எத்தனை மொழிபெயர்ப்புப் பிரதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்
  • கால எல்லை : 05 அலுவலக நாட்கள்.
  • தற்போது ஒரு நாள் சேவை இல்லை.

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk