Content will be updated soon.

இ - சனத்தொகை

பிறப்பு, விவாகம், இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்வது பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பொறுப்பாகும். பதிவேடுகளில் பேணப்படுகின்ற பதிவுகள் எழுத்துறுமுறையில் பேணப்படுவதனால் ஏனைய அரச முகவர் நிலையங்களுக்கு அவறறைப் பெற முடியாது.அதன் விளைவாக பிரதிபண்ணுவதற்கு நேரமும் பணமும் செலவாகின்றது. ஒரே விதமான தனிப்பட்ட அடையாள எண்களை (PஐN) வழங்குதல், ஒவ்வொரு இலங்கைப் பிரசைபற்றிய தகவல்களைத் திரட்டுதல், நம்பகமான வினைத்திறன்மிக்க வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் முறைமையை உருவாக்குதல், சனத்தொகை பதிவைப் பயன்படுத்தி அரச நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நிலை அதிகரித்தல், வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவுசெய்தல என்பவை உட்பட சுகாதார புள்ளிவிபரங்கள் மற்றும் பிறப்பு நோய்நிலை பற்றிய பகுப்பாய்வு என்பவற்றை வழங்குதல் இதன் நோக்கமாகும். ந - சனத்தொகை முறைமை இந்த நோக்கங்களை நிறைவேற்றுகின்ற அதேநேரத்தில், பெற்றோர்கள் உறுதிப்படுத்துகின்ற தரவுகளின் சரியான தன்மையை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் ஏதேனும் பிரதேச செயலகத்தின் சான்றிதழ்களை தேடுதல் மற்றும் வழங்குதல், மொழிபெயர்ப்பு தேவைகளைக் குறைத்துக்கொள்ளுதல், வெளிநாடுகளில் கூட பயன்படுத்தக்கூடியதாக இருத்தல், பிரசைகளின் நடப்பு தகவல்களைப் பராமரித்தல் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் பிரசைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல். ஆகிய பயன்களை உறுதிப்படுத்துகின்றது.

இ - காணி

மூலதனத்தை உற்பத்திசெய்கின்ற ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு காணி சொந்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீண்டகால தடைகளாக இருக்கின்றன. நீண்ட தேடுதலில் உள்ள கஷ;டமும் காணி பதிவு அலுவலகங்களில் வேலைசெய்வதற்குப் போதியளவு இடவசதியில்லாமையும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒரு தடையாக இருக்கின்றது. மேற்குறிப்பிட்ட பிரச்சினைக்கு ந- காணி பதிவு அலுவலகம் ஒரு தீர்வை வழங்கியதன் விளைவாக காணி பதிவு அலுவலகங்களை இலகுவாக அணுகுதல், பதிவு தகவல்கள் மற்றும் பரம்பரை தகவல்கள் என்பவற்றை விருத்திசெய்யும் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களுக்காக ஆவணங்களைப் பாதுகாத்தல், விரைவான, செலவு குறைந்த, அதிக வசதியான சேவைகளை பொதுமக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் வழங்குதல், காணி பதிவு தகவல்களை மேம்படுத்துவதன் ஊடாக இலங்கையின் வியாபார குறிகாட்டியை உயர்த்துதல் என்பவை இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

இ - பிறப்பு விவாகம் இறப்பு

பொதுமக்களுக்கு பிறப்பு, விவாகம், மரண பதிவுகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பிரதான செயற்பாடாகும். பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது இச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சரியான இலக்கம், திகதி, சம்பவம் நிகழ்ந்த காலம் போன்ற கட்டாய விபரங்கள் விண்ணப்பதாரருக்கு தெரியாதபோது எழுத்துறுமுறையில் தேடுவது மிகவும் கஷ;டமாகும். இத்தகைய கால விரயத்தை ஏற்படுத்துகின்ற தேடும் வேலைகளைத் தவிர்ப்பதற்காக ந- பிறப்பு விவாகம் இறப்பு கருத்திட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கம், தரவுதலத்தைப் பேணுதல், முறைமையின் ஊடாக சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் பிறப்பு, விவாகம், இறப்பு ஆகியவற்றின் பதிவுசெய்யப்பட்ட தகவல்களை ஏனைய அரச முகவர் நிலையங்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் என்பவையாகும். இவற்றைவிட விருத்திசெய்யப்பட்ட தரவுதலம், விரைவான தேடலை நடத்துதல், சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை விரைவாக வழங்குதல் மற்றும் பிரதேச மட்டத்தில் உள்ள அலுவலகங்களுக்கு தரவுத்தலங்களைப் புகுத்துவதன் மூலம் சான்றிதழ்களை விநியோகிக்கும் பணிகளைப் பன்முகப்படுத்துதல் போன்ற நன்மைகளும் கிட்டுகின்றது.

இ - உரித்து

பிம் சவிய

காணி சொந்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணி பதிவேடுகளை அணுகுவதில் உள்ள சிரமம் காரணமாக காணி பயன்பாட்டில் நீண்டகால தடைகளாக இருக்கின்றன. காணி சொந்தம் அல்லது எல்லைகள் என்பவற்றின் மூலம் எழுகின்ற அநாவசியமான பிணக்குகளைத் தவிர்ப்பதற்காக காணிப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் விருத்திசெய்வதற்கும் வலுவான மற்றும் தெளிவான காணி உரித்தை வழங்குவதற்காக இலங்கைக்கு உரித்து பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்கம் உறுதிப்படுத்திய உரித்து சான்றிதழை வழங்குவதற்கும் சிறந்த காணி முகாமைத்துவத்திற்கும் கணனியை அடிப்படையாகக்கொண்ட காணி தகவல் முறைமை உதவுகின்றது. அதன்படி பொதுமக்களுக்கு இலகுவான விரைவான வினைத்திறன்மிக்க பரிமாற்றல் முறையை முன்வைக்க முடியும்.

வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்

  • மரணம் நிகழ்ந்த 05 நாட்களுக்குள்ிராம உத்தியோகத்தருக்கு தெரிவித்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு மரணத்தையும் பொறுத்தமட்டில், படிவம் B24 இன் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று கிராம உத்தியோகத்தரினால் இறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
  • இறப்பு பதிவு செய்யப்படுவது இறப்பு நிகழ்ந்த இடத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரினால் ஆகும்.
  • இறப்பு பதிவு படிவம் CR02 பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்..
  • மரணத்தை அறிவிப்பதற்குத் தகுதியுள்ள நபர்கள்;
    • மரணம் நிகழும் போது அருகிலிருந்த நெருங்கிய உறவினர்
    • இறுதியாக நோயுற்றிருந்த போது பணிவிடை செய்த நெருங்கிய உறவினர்
    • அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
      • இறந்தவர் வசித்த பதிவாளர் பிரிவில் வசிக்கும் இறந்தவரின் உறவினர்
    • அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
      • இறக்கும் போது அருகிலிருந்த ஒருவர்
      • மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
    • மேற்குறித்த நபர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில்,
      • இறந்த உடலை புதைப்பவர், தகனம் செய்பவர் அல்லது வேறு வகையில் அது தொடர்பான இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளும் நபர்.
  • இறப்பு நிகழ்ந்த 03 மாதங்களுக்குள் மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
  • இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் இறப்பைப் பதிவு செய்து கொள்ள முடியும், அதற்கு தாமதமான இறப்பு பதிவு செய்தல் விபரங்களைப் பார்வையிடவும்.
  • அறிவிப்பாளருக்கு இலவசமாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)

வைத்தியசாலையில் (அரசு அல்லது தனியார்) நிகழ்ந்த இறப்புகளை பதிவு. செய்தல்

  • மரணம் நிகழ்ந்தது ஒரு வைத்தியசாலையில் என்றால், அந்த வைத்தியசாலைக்கரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு மரணத்தை பதிவு செய்வதற்கு அறிவித்தல் வேண்டும்.
  • இறப்பை அறிவிப்பதற்கு தேவையான பிரகடன படிவத்தை (பதிவு செய்தல் CR02 படிவம்) பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
  • இறப்பைப் பதிவுசெய்வதற்காகத் அறிவித்தல் வழங்குவதற்குத் தகுதியான நபர்கள்,
    • இறந்தவரின் உறவினர்
    • இறக்கும் போது அருகில் இருந்த நபர்
    • வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் படிவம் CR02
    • மரணம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை
  • 03 மாத காலத்திற்குள் ஒரு மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)

பதிவுசெய்யப்பட்ட தோட்டத்தில் நிகழும் மரணத்தைப் பதிவு செய்தல்

  • இறப்பு நிகழ்ந்த 24 மணிநேரத்திற்குள், பின்வரும் தகுதி வாய்ந்த நபர்களால் இறப்பு தொடர்பாக தோட்ட அதிகாரிக்குத் தெரிவித்தல் வேண்டும்.
  • அறிவித்தல் வழங்குவதற்குத் தகுதியான நபர்கள்;
    • இறந்தவரின் உறவினர்
    • இறக்கும் போது அருகில் இருந்த நபர்
    • மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
    • மரணம் தொடர்பான இறுதிச் சடங்குகளை மேற்கொள்பவர்கள்
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள் இருப்பின்
    • இறந்தவரின் மருத்துவ அமர்வு அறிக்கைகள் (இருப்பின்)
  • தோட்ட அதிகாரியினால் இறப்பு அறிக்கையைக் குறிப்பிட்டுசான்றுப்படுத்தப்பட்ட தோட்ட அதிகாரி இறப்பு அறிக்கையுடன் (பதிவு செய்தல் படிவம் CR02) மாவட்ட வைத்திய அதிகாரி ஊடாக பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • மேலதிக மாவட்டப் பதிவாளரால் இறப்பு பதிவு செய்யப்பட்டு, இறப்புச் சான்றிதழ் உரிய தோட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பதாரர் இறப்புச் சான்றிதழை தோட்ட அதிகாரியின் அலுவலகத்திலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் ஏற்பட்ட இலங்கையர் ஒருவரின் மரணத்தை வெளிநாட்டில் பதிவு செய்தல்

  • இறக்கும் போது இலங்கையர்அல்லதுஇரட்டைக்குடியுரிமைபெற்றவரின்மரணத்தைவெளிநாட்டில்பதிவுசெய்து கொள்ளலாம்.
  • இறப்பு நிகழ்ந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் / உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் மரணம் பதிவு செய்யப்படுகின்றது.
  • இறப்பு தொடர்பாக அறிவிப்பிற்குத் தேவையான அறிவிப்புப் படிவம் இலங்கைத் தூதரகம் / உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
  • இறப்பைப் பதிவுசெய்வதற்காக அறிவித்தல் விடுப்பதற்குத் தகுதியான நபர்கள்:
    • இறந்தவரின் நெருங்கிய உறவின்
    • இறக்கும் போது அருகில் இருந்த நபர்
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (அசல் மற்றும் நகல் பிரதிகளின் தொகுப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்):
    • இலங்கைப் பிரசை அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் (விசா/ இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ்)
    • இறந்தவரின் கடவுச் சீட’டு (இறக்கும் போது செல்லுபடியான)
    • குறித்த நாட்டில் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்
    • மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடும் வைத்தியசாலை அறிக்கை
    • இறந்தவரின் பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • அறிவிப்பாளரின் உறவு முறையை நிரூபிக்கும் ஆவணம் (தேவைக்கேற்ப பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்)
  • அரசாங்கக் கட்டணமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் நிர்ணயிக்கப்படும் தொகையை அந்தந்த நாட்டின் செல்லுபடியாகும் நாணயத்தில் செலுத்தப்படல் வேண்டும்.

வெளிநாட்டில் மரணித்த ஒருவரின் மரணத்தை இந்நாட்டில் பதிவு செய்தல்

  • ஒரு வருட காலத்திற்குள் தொடர்புடைய நாட்டின் தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் உரிய அரசாங்கக்கட்டணத்தைச்செலுத்திமரணத்தைப்பதிவுசெய்துகொள்ளமுடியாது போய் விடின், ஒரு வருட காலத்தின் பின்னர் காலம் கடந்த மரணமாக பதிவு செய்து கொள்வதற்கு பின்வரும் ஆவணங்களை மரணம் நிகழ்ந்த நாட்டின் தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அதனை குறித்த தூதரகத்தால் மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
  • மேலும், மரணம் வெளிநாட்டில் உள்ள தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பதிவு செய்யப்படாவிட்டால், மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் மரணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
  • மரணம் தொடர்பாக அறிவிப்பதற்குத் தேவையான பிரகடனப் படிவம் மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்தின் Consular பிரிவில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
  • இறந்தவர் இலங்கையர் அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  • இறந்தவரின் வாழ்க்கைத் துணை, தாய், தந்தை, சகோதரர், பிள்ளை அல்லது அவ்வாறான யாரும் இல்லாத பட்சத்தில் அது தொடர்பாக ஆர்வமுள்ள தரப்பினருக்கு இறப்பைப் பதிவு செய்வதற்கான அறிவிப்பாளராக முன்வரலாம்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (அசல் மற்றும் நகல் பிரதிகளின் தொகுப்பு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்):
    • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனப் படிவம்
    • வெளிநாட்டு இறப்புச் சான்றிதழ்
    • இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் குறிப்பிடப்படாவிட்டால் இறப்புக்கான காரணத்தைக் குறிப்பிடும் அறிக்கை
    • இறந்தவரின் பிறப்புச் சான்றிதழ்
    • இறந்தவரின் கடவுச்சீட்டு
    • உடல் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தால் கார்கோ பற்றுச் சீட்டு
    • அறிவிப்பாளரின் உறவை நிரூபிக்கும் ஆவணம் (தேவையாயின் பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்)
    • இறுதிக் கிரியைகள் இலங்கையில் மேற்கொள்ளப்படின் போக்குவரத்து விலைப்பட்டியல்
    • வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம் (இலங்கையில் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுமாயின்)
    • அறிவிப்பாளரின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படப் பிரதி
    • அறிவிப்பாளரின் முகவரி மற்றும் உரிய முத்திரை ஒட்டப்பட்ட 9*4 அளவிலான கடித உறை
    • வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் Consular பிரிவிற்கு பதிவுக் கட்டணமாக ரூ.8,180/- செலுத்தி பெற்றுக் கொள்ளப்பட்ட பற்றுச் சீட்டு.
    • சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் அல்லாத வேறு மொழிகளில் உள்ள ஆவணங்களின் மொழிபெயர்ப்பு

ஆகியன சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

  • இது தொடர்பான தகவல்களை பதிவாளர் நாயகம் தணைக்களத்தின் மத்திய ஆவணக் காப்பகத்தின் பிரதிப் பதிவாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தொலைபேசி இல. ; +94 112 329 773 அல்லது +94 112 433 075/ 071 8255066

பதிவு செய்யப்படாத இறப்புக்களை பதிவு செய்தல்

காலம் கடந்த இறப்புக்களை பதிவு செய்தல்

  • மரணம் நிகழ்ந்து மூன்றுமாதங்களுக்குள்இறப்புபதிவுசெய்யப்படாமல்இருந்தால், அத்தகைய மரணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
  • மரணம் நிகழ்ந்து 25 வருடங்களுக்கு மேற்படாத காலத்தினுள் மரணம் தொடர்பான பிரகடனப் படிவம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். (திடீர் மரணம் தவிர)
  • பிரகடனப் பத்திரம் மரணம் நிகழ்ந்த பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • பிரகடனப் பத்திரத்தை முன்வைக்க தகுதிபெற்ற நபர்கள்
    • இறக்கும் போது உடனிருந்த அல்லது இறப்பெய்தியவர் இறுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த போது அவருக்கு பணிவிடை செய்த நெருங்கிய உறவினர்.
    • ஆர்வமுள்ள ஏனையவர்கள்
  • அறிவிப்புப் படிவத்திற்கான கட்டணம் ரூ. 60.00 ஆகும்.

இறப்புச் சான்றிதழில் உள்ளிடப்பட்ட விபரங்களைத் திருத்துதல்

  • பிரகடனப் படிவத்தை மரணம்நிகழ்ந்த பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • பின்வரும் நபர்களில் ஒருவரால் பிரகடனம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    • சம்பவத்தை பதிவு செய்வதற்கு தகவல் வழங்கியவர்
    • விடயத்தைப் பற்றிய உண்மையை அறிந்த நம்பகமான நபர்
  • இறப்புச் சான்றிதழின் பதிவுத் திகதி தவிர்ந்த அனைத்து தகவல்களையும் திருத்தலாம்.
  • பிரகடனப் பத்திரத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ. 60.00 ஆகும்.
  • பிரகடனப் பத்திரத்தில் கூறப்பட்ட கோரிக்கையின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக  பெற்றுக்கொள்ளத்தக்க எழுத்துப்பூர்வ ஆதாரங்களை முன்வைத்தல் வேண்டும்.

காணாமற்போனவர்களின் இறப்பினை பதிவு செய்தல் / கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழ் வழங்கல்

சிலர் காணாமல் போனதை மரணமாக நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அல்லது குறித்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழைப் பதிவு செய்வதற்கு உறவினர்கள் விரும்பாத காரணத்தினால், குறித்த காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எந்தவித சட்டபூர்வமான ஆவணங்களும் இல்லாத காரணத்தினால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

அத்தகைய நபர்களுக்கு இறப்புச் சான்றிதழோ அல்லது கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழோ வழங்குவதற்கு பின்வரும் சட்டங்களின் மூலம் ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

  • 2010 ம் ஆண்டின் 19 ம் இலக்க இறப்புகளை பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம்
  • 2016 ம் ஆண்டின் 16 ம் இலக்க இறப்புகளைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது அல்லது மோதல்களின் பின்னர் அல்லது அரசியல் அமைதியின்மை அல்லது சிவில் கலவரங்கள் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக காணாமல் போயுள்ளதாக அறிக்கையிடப்பட்ட நபர்கள் அல்லது யுத்த நடவடிக்கையின் போது காணாமல் போனவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆயுதப்படை அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்ற காணாமல் போனவர்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது பேரழிவுகள் காரணமாக காணாமல் போனவர்கள் போன்றவர்களின் இறப்பு பதிவுகள் மற்றும் விசாரணை ஆணைக்குழுக்கள் அல்லது விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் வெளிப்படுத்தும் தகவல்களின் அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைக்கலாம்.

கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழுக்காக விண்ணப்பிக்க முடியுமாயிருப்து காணாமற்போன நபரின் உறவினர்களால் ஆகும்.

குறிப்பு ; சட்டத்தின் பிரிவு 14 இல் வரையறுக்கப்பட்டுள்ள "உறவினர்" என்பது,

  • வாழ்க்கைத் துணை;
  • தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், திருமணமாகாத பெற்றோரின் பிள்ளைகள் அல்லது மாற்றாந்தாய் பிள்ளைகள் உட்பட குழந்தைகள்;
  • பெற்றோர், மாற்றாந்தாய், மாற்றாந்தகப்பன், தத்தெடுக்கப்பட்ட நபர்;
  • உடன்பிறந்த அல்லது ஒருவழி சகோதரர்கள் (வேறு தாய்/வேறு தந்தைக்குப் பிறந்த சகோதரர்கள்) அல்லது சகோதரிகள் அல்லது தத்தெடுக்கப்பட்ட சகோதரர்கள் அல்லது சகோதரிகள்;
  • மாமனார், அத்தைமார், மைத்துனர்கள், அண்ணிமார், மருமகன்கள், மருமகள்கள்;
  • பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் தாத்தாமார் மற்றும் பாட்டிமார்

விண்ணப்பிக்க வேண்டிய முறை

காணாமல் போய் ஒரு வருடத்திற்கு மேல் கடந்துள்ள நபர்களுக்கு, "கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழ்" (COA) அல்லது இறப்புச் சான்றிதழின் (COD) பதிவுக்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டியது, காணாமல் போன நபர் கடைசியாக வசித்த அல்லது அவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள பிரதேசத்தின் மாவட்டப் பதிவாளரிடம் ஆகும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய இதர ஆவணங்கள் (சட்டத்தின் பிரிவு 8 ஆ)

  • உறுதிமொழி (இணைப்பு
  • கிராம உத்தியோகத்தர் அறிக்கை (இணைப்பு 03)
  • கோரிக்கையை உறுதிப்படுத்தும் ஏனைய சான்றுகள்
  • ஆணைக்குழுக்களின் தீர்மானத்தின் சான்றுப்படுப்பட்ட பிரதி

சான்றுப்படுத்தப்பட்டபிரதிகளை மற்றும்மொழிபெயர்க்கப்பட்டபிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

  • இறப்புச்சான்றிதழின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியது மரணம் நிகழ்ந்த இடத்திற்குரிய பிரதேசசெயலகத்திலாகும். குறித்த சான்றிதழ் தரவுஅமைப்பில்இருப்பின், உங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். 1960.01.01 முதல் 2020.12.31 வரையிலான சான்றிதழ்களின் பிரதிகளை தரவு அமைப்பு ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம். (தரவு அமைப்பில் உள்ளதா என்பதை அருகிலுள்ள பிரதேச செயலகத்திலிருந்து பரீட்சித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்)
  • தேவையான விண்ணப்பப் படிவத்தை எந்தவொரு பிரதேச செயலகத்தினதும் மாவட்ட பதிவாளர் பிரிவிலிருந்தும் / இணையதளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
  • அறவிடப்படும் கட்டணம்,
    • இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி தெரிந்திருப்பின் ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.120.00 ஆகும்.
    • இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி தெரியவில்லை எனின், ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.250.00 ஆகும் (இரண்டு ஆண்டுகளுக்கு மிகைப்படாமல் ஆவணங்களைத் தேட வேண்டியுள்ளதால்)
  • உரிய கட்டணத்தை பிரதேச செயலகத்தில் அல்லது பதிவாளர் நாயகத்தின் இலங்கை வங்கியின் (புறக்கோட்டை கிளை) கணக்கு இலக்கம் 7039827 இற்குச் செலுத்தி, வங்கிச் சீட்டு (Bank Slip) மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து சான்றிதழின் பிரதியைக் கோரலாம்.
  • இறப்புச் சான்றிதழை தபால் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனின், சுயமுகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட உறையை மேலே குறிப்பிட்டவாறு கட்டணம் செலுத்திய பற்றுச் சீட்டு மற்றும் விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து சமர்ப்பித்தல் வேண்டும்.
  • இறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால், செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப தொடர்புடைய இறப்புச் சான்றிதழின் கோரப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை வழங்கப்படும் என்பதோடு இறப்பு பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் அது தொடர்பாக படிவம் B38 மூலம் தெரிவிக்கப்படும்.

*அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Onlineமுறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.

இறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

  • இந்தச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றும் திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் தொடர்பான விபரங்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.. மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றும் அலுவலகங்கள்
  • பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்புகள்
    • சிங்களம் – ஆங்கிலம்
    • ஆங்கிலம் – சிங்களம்
    • தமிழ் – ஆங்கிலம்
    • ஆங்கிலம் – தமிழ்
  • விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் நேரம் : வாரத்தின் அலுவலக நாட்களில் மு.ப. 9.00 மணி. – பி.ப. 2.30 (சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் திறக்கப்படாது.)
  • விண்ணப்பப் படிவத்தை மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலிருற்தோ அல்லது இணையதளத்திலிருந்தோ பெற்றுக் கொள்ளலாம்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
    • மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஆவணத்தின் அசல் பிரதி அல்லது பிரதேச செயலகத்திலிருந்து பெறப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • தபால் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனின், மேற்குறித்த தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக சுய முகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட கடித உறையொன்று
  • மொழிபெயர்ப்பு கட்டணம்
    • ஒரு மொழிபெயர்ப்புப் பிரதிக்கு ரூ. 600.00.
    • எத்தனை மொழிபெயர்ப்புப் பிரதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்
  • கால எல்லை : 05 அலுவலக நாட்கள்.
  • தற்போது ஒரு நாள் சேவை இல்லை.

திருமணங்களை (பொதுவான).பதிவு செய்தல்

  • இருதரப்பினரும்முஸ்லிம்கள்அல்லாதவேறுஎந்தவொருஇனத்தை அல்லதுமதத்தைச்சேர்ந்தவர்களாயின், திருமண (பொதுவான) பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்.
  • திருமண அறிவிப்பு இரண்டு பிரதிகளில் எழுதப்பட்டு சான்றுப்படுத்தப்பட்டு, பிரிவின் திருமணப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். (பெயர் மற்றும் பிறந்த திகதி என்பவற்றை சான்றுப்படுத்துவதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது ஏனைய ஆவணமொன்று)
  • அறிவித்தலை சான்றுப்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றவர்கள்
    • பிரிவின் திருமணப் பதிவாளர்
    • சமாதான நீதவான்
    • பிரசித்த நொத்தாரிசு
    • அருட்தந்தை
  • திருமண அறிவித்தலொன்றை வழங்குவதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
    • தரப்பினர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் வதிவிடம் தொடர்பான தேவையை பூர்த்தி செய்தல்
      • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் குறித்த பிரிவில் வசித்திருத்தல்.
      • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் தனித்தனி பிரிவுகளில் வசித்திருத்தல்.
      • தரப்பினர்களில் ஒரு தரப்பினர் திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
  • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்களில் எந்தவொரு தரப்பினரும் இலங்கையில் வசித்திருக்கவில்லை என்றால், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
  • இரு தரப்பினரும் கடைசி பிறந்த திகதியில் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல்.
  • அவர்கள் திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட உறவு முறையினர்கள் அல்லாதவர்களாயிருத்தல்,
  • ஏற்கனவே செல்லுபடியாகும் திருமணமொன்றை செய்து கொள்ளாதவர்களாயிருத்தல்
  • திருமணத்தை (பொதுவான) பதிவு செய்வதற்காக திருமண அறிவித்தலை உரிய பதிவாளரிடம் கையளித்து 14 நாட்கள் கழிதல் வேண்டும்.
  • அவ்வாறு 14 நாட்கள் கழிவதற்கு முன்னர் திருமணத்தை பதிவு செய்ய விரும்பினால், வி​ஷேட அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் பதிவு செய்வதற்கு பதிவாளரிடம் கோரலாம்.
  • இரண்டு பிரிவுகளின் திருமணப் பதிவாளர்களுக்கு திருமண அறிவித்தல்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பின், அறிவித்தல் பரிமாற்றம் மற்றும் பதிவாளரின் சான்றிதழை வழங்கியதன் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
  • திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள இடமொன்றில் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனின், அதற்கான விஷேட அனுமதியைப் பெற்றுக் கொள்ள​ வேண்டுமென்பதோடு, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

** மேற்கூறிய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ததன் பின்னர், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவாளரினால் திருமணம் பதிவு செய்யப்படுவதோடு, திருமணச் சான்றிதழின் மூன்றாவது பிரதி​ மணமகளிடம் ஒப்படைக்கப்படும்.

  • திருமணத்தைபதிவுசெய்யும்போதுபதிவாளருக்குசெலுத்தவேண்டியகட்டணம்

    இல.

    விடயம்

    யாருக்கு செலுத்தப்பட   வேண்டும்

    யாரால் செலுத்தப் பட வேண்டும்

    தொ​கை (ரூ)

    பணம் செலுத்தும் முறை

    1

    பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ திருமண அறிவித்த​லை உள்ளிடுதல்

    பதிவாளர்

    விண்ணப் பதாரர்

    120.00

    பணமாக செலுத்துதல் வேண்டும்

    2

    மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது வேறு எந்த இடத்திலும் திருமண அறிவித்த​லை உள்ளிடுதல்

    மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

    விண்ணப் பதாரர்

    120.00

    பணமாக செலுத்துதல் வேண்டும்

    3

    திருமண அறிவித்தல் தொடர்பாக பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்

    பதிவாளர்

    திருமண தரப்பினர்

    120.00

    பணமாக செலுத்துதல் வேண்டும்

    4

    திருமண அறிவித்தல் தொடர்பாக மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்

    மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

    திருமண தரப்பினர்

    120.00

    பணமாக செலுத்துதல் வேண்டும்

    5

    பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்

    பதிவாளர்

    திருமண தரப்பினர்

    900.00

    பணமாக செலுத்துதல் வேண்டும்

    6

    மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்

    மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

    திருமண தரப்பினர்

    900.00

    பணமாக செலுத்துதல் வேண்டும்

    7

    பிரிவு 38(1) அல்லது 38(2) இன் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல்

    பதிவாளர்

    திருமண தரப்பினர்

    900.00

    பணமாக செலுத்துதல் வேண்டும்

    -----

    -----

    -----

     

    8

    பிரிவு 38(1) அல்லது 38(2) இன் கீழ் மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல்

    மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

    திருமண தரப்பினர்

    900.00

    பணமாக செலுத்துதல் வேண்டும்

    9

    பிரிவு 27(3) இன் கீழ் விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல்

    அரசாங்கத்திற்கு

    திருமண தரப்பினர்

    120.00

    பணமாக செலுத்துதல் வேண்டும்

    10

    பதிவு செய்யப்பட்ட வணக்கஸ்தலத்தில் நடைபெறும் திருமணத்தைப் பதிவு செய்தல்

    மாவட்ட பதிவாளர்

    திருமண தரப்பினர்

    900.00

    பணமாக செலுத்துதல் வேண்டும்

    11

    பிரிவு 38 1,2 இன் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணத்தை பதிவு செய்வதற்கான வீட்டு அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்

    அரசாங்கத்திற்கு

    திருமண தரப்பினர்

    60.00

    பணமாக செலுத்துதல் வேண்டும்

திருமணங்களை (பொதுவான).பதிவு செய்தல்

  • கிறிஸ்தவ சமயத்தினர்கள்தங்கள்சொந்ததேவாலயங்களில்திருமணம்செய்துகொள்ளஅனுமதிக்கப்படுகிறார்கள்.
  • திருமண அறிவித்தலை இரண்டு பிரதிகளில் எழுதி சான்றுப்படுத்தி, பிரிவின் திருமணப் பதிவாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும். (பெயர் மற்றும் பிறந்த திகதியை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது வேறு ஆவணமொன்று)
  • அறிவித்தல்களை சான்றுப்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றவர்கள்
    • பிரிவின் திருமணப் பதிவாளர்
    • சமாதான நீதவான்
    • பிரசித்த நொத்தாரிசு
    • அருட்தந்தை
  • திருமண அறிவித்தலொன்றை வழங்குவதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
    • தரப்பினர்கள், குறித்த பிரிவில் வதிவிடம் தொடர்பான தேவையை பூர்த்தி செய்தல், அதாவது,
      • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் குறித்த பிரிவில் வசித்திருத்தல்.
      • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் தனித்தனி பிரிவுகளில் வசித்திருத்தல்.
      • தரப்பினர்களில் ஒரு தரப்பினர் திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
      • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்களில் எந்தவொரு தரப்பினரும் இலங்கையில் வசித்திருக்கவில்லை என்றால், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
    • இரு தரப்பினரும் கடைசி பிறந்த திகதியில் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல்.
    • அவர்கள் திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட உறவு முறையினர்கள் அல்லாதவர்களாயிருத்தல்,
    • ஏற்கனவே செல்லுபடியாகும் திருமணம் செய்து கொள்ளாதவர்களாயிருத்தல்
    • விவாகரத்து பெற்றவர்கள் எனின், முற்றான கட்டளையின் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.
    • இலங்கையின் திருமண (பொதுவான) சட்டத்தின் கீழ் திருமணம் செய்து, பின்னர் வெளிநாடொன்றில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் விவாகரத்து பெற்றிருப்பின். இலங்கையில் உள்ள குறிப்பிட்ட அதிகார வரம்பில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து விவாகரத்து தொடர்பான கட்டளையைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.
  • பதிவு செய்தல் கட்டணம் ரூ. 900.00. ஆகும்.
  • பதிவாளர் அல்லது மேலதிக மாவட்ட பதிவாளரிடம் இருந்து பதிவாளர் சான்றிதழ்” (பதிவுசெய்தல் B103 படிவம்) பெறப்பட வேண்டும்.
  • குறித்த பதிவாளர் சான்றிதழை திருமணத்தை பதிவு செய்ய வேண்டிய தேவாலயத்தின் அருட்தந்தையிடம் சமர்ப்பிப்பதன் மூலம் தேவாலய திருமணத்தை நடத்தலாம்.
  • அதன் பின்னர் அருட்தந்தை வழங்கிய அருட்தந்தை சான்றிதழை (B

இலங்கையர் ஒருவர் மற்றும் வெளிநாட்டவர் ஒருவர் இடையேயான திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறை

ஆண்/பெண்இருபாலர் சம்பந்தமான பின்வரும் விடயங்கள் தொடர்பான ஆவணங்கள்பதிவாளரிடம்சமர்ப்பிக்கப்படல்வேண்டும்.

  • திருமணஅறிவித்தல் (2 பிரதிகளுடன்எழுதப்பட்டுசான்றுப்படுத்தப்பட்ட)
  • வெளிநாட்டவர் இலங்கைக்குள் நுழைவதற்கு தேவையான விசா, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் அதன் பிரதி
  • தனது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட குடியியல் நிலையை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் அசல் பிரதி மற்றும் விவாகரத்து/ விதவையின் விடயத்தில் அதனை உறுதிப்படுத்தும் சட்டரீதியான ஆவணங்கள்.
  • வெளிநாட்டவரின் உடல்நிலையை சான்றுப்படுத்துவதற்கான ஒரு சுய பிரகடனம் (Health Declaration)
  • பிறப்புச் சான்றிதழ்கள் (பெயர் மற்றும் வயதைஉறுதிப்படுத்துவதற்கு தேவைப்படின்) மற்றும் அதன் பிரதி
  • பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம்.

பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறை

வெளிநாட்டவர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் அல்லது பின்னர், பின்வரும் ஆவணங்கள் தொடர்புடைய தரப்பினரால் (திருமணம் முடிக்கும் இருவரினால் அல்லது அவர்களது நெருங்கிய உறவினர்களால் மாத்திரம்) திணைக்களத்தின் சிவில் பதிவுப் பிரிவில் சமர்ப்பித்தல் வேண்டும்.

  1. விண்ணப்பப் படிவம்
  2. இலங்கைப் பிரசையின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படப் பிரதி
  3. வெளிநாட்டுப் பிரசையின் கடவுச் சீட்டின் புகைப்படப் பிரதி
  4. வெளிநாட்டுப் பிரசையின், குற்றச் செயலொன்றுக்கு குற்றவாளியாக்கப்படவில்லை எனும் பொலிஸ் சான்றிதழ் (6 மாதங்களுக்குள் பெறப்பட்ட)
  5. வெளிநாட்டவரின் சிவில் அந்தஸ்து பற்றிய சான்றிதழ் (06 மாதங்களுக்குள் பெறப்பட்ட) இதற்கு முன்னர் திருமணம் முடித்த நபரொருவர் எனின், விவாகரத்து சான்றிதழ் மற்றும் சிவில் நிலை தொடர்பான சான்றிதழ்).
  • மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு ஆவணத்தினதும் 4 பிரதிகள் விகிதம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
  • சிவில் அந்தஸ்து தொடர்பான சான்றிதழை உரிய நாட்டின் அரச நிறுவனமொன்றினால் வழங்கப்படுதல் வேண்டுமென்பதோடு, உரிய நாட்டின் அரச நிறுவனத்தினால் சிவில் அந்தஸ்து தொடர்பான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் மாத்திரமே சத்தியக் கடதாசி சமர்ப்பிக்க முடியும். சத்தியக் கடதாசியை குறித்த நாட்டின் அரச அலுவலகமொன்றினால் சான்றுப்படுத்தப்படுதல் வேண்டும்.
  • இங்கு, வெளிநாட்டவர் வெளிநாட்டில் திருமணம் செய்து, வெளிநாட்டில் விவாகரத்து பெற்றிருந்தால், வெளிநாட்டு விவாகரத்து கட்டளை அல்லது இலங்கையில் திருமணம் செய்து, வெளிநாட்டில் விவாகரத்து செய்திருந்தால், வெளிநாட்டு விவாகரத்து கட்டளை மற்றும் இலங்கை விவாகரத்து கட்டளை என்பவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
  • திருமணப் பதிவை பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவின் திருமணப் பதிவாளரின் மூலம் மேற்கொள்ளல் வேண்டும் என்பதோடு திருமணப் பதிவாளரின் மூலம் திருமணம் நடாத்தப்பட்டால், குறித்த பதிவாளர் மற்றும் உரிய பிரதேச செயலகத்தின் பெயரை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடல் வேண்டும்.
  • விண்ணப்ப்ப் படிவத்தில், திருமணம் இடம்பெறும் திகதி, இடம் மற்றும் உரிய மாவட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடல் வேண்டும்.
  • ஆவணங்களை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்த நாளிலிருந்து இசைவு அறிக்கையைப் பெறுவதற்கு 14 வேலை நாட்கள் எடுக்கும்.
  • பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம், வழங்கப்பட்ட நாளிலிருந்து 03 மாதங்கள் செல்லுபடியாகும்.
  • இந்த அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு கட்டணம் ஏதும் அறவிடப்பட மாட்டாது.
  • திருமண அறிவித்தலைச் சமர்ப்பிக்கும் போது மேற்குறிப்பிட்ட ஆவணங்களை உரிய மேலதிக மாவட்டப் பதிவாளர்/ பிரிவின் திருமணப் பதிவாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
  • இது தொடர்பான இல. 18/2021 மற்றும் 2021.10.18ம் திகதிய சுற்றறிக்கை 2022.01.01ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அதன் திருத்தப்பட்ட 18/2021(1)ம் இலக்க சுற்றறிக்கை 2022.08.01ம் திகதி முதல் செயற்பாட்டில் உள்ளது.

கண்டிய சட்டத்தின் கீழ் திருமணங்களை பதிவு செய்தல்

  • கண்டியசட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொள்ள முடியமாயிருப்பது, கண்டிய சட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிங்களவர்களுக்கு மாத்திரமேயாகும்.
  • கண்டிய திருமணச் சட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள்
    • மத்திய மாகாணம்
    • வட மத்திய மாகாணம்
    • ஊவா மாகாணம்
    • சப்ரகாமுவ மாகாணம்
    • வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு வவுனியாவின் செட்டிக்குளம் கோறளை மற்றும் தெற்கு கிழக்குமலை கோறளை
    • கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிந்தென்ன பற்று, வேகம்பற்று மற்றும் பானம பற்று மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் கடுக்குளம் பற்று.
    • வடமேல் மாகாணத்தின் குருணாகல் மாவட்டம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் தமிழ் ஹத்பத்துவ.
  • கண்டிய சட்டத்தின் கீழ் திருமணங்களை பதிவு செய்வதற்கான அதிகாரம் மேற்குறித்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட திருமணப் பதிவாளர்களுக்கு மாத்திரமே உள்ளது.
  • இந்த சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்வதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
    • சம்பந்தப்பட்ட பிரிவில் இரு தரப்பினரின் வசிப்பிடம் தொடர்பான தேவைப்பாடு
      • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் குறித்த பிரிவில் வசித்திருத்தல்.
      • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் தனித்தனி பிரிவுகளில் வசித்திருத்தல்.
      • தரப்பினர்களில் ஒரு தரப்பினர் திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
      • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்களில் எந்தவொரு தரப்பினரும் இலங்கையில் வசித்திருக்கவில்லை என்றால், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
    • இரு தரப்பினரும் கடைசி பிறந்த திகதியில் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல்.
    • இரு தரப்பினரும் திருமணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட உறவு முறையினர்கள் அல்ல என (1952ம் ஆண்டின் 44ம் இலக்க கண்டிய விவாகரத்துச் சட்டத்திற்கு அமைய)
    • ஏற்கனவே செல்லுபடியாகும் திருமணம் செய்துகொள்ளவில்லை என
  • மேற்கூறிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால், முறையாக பூர்த்தி செய்யப்பட்டு சான்றுப்படுத்தப்பட்ட திருமண அறிவித்தலை இரண்டு பிரதிகளில் பிரதேச திருமணப் பதிவாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
  • திருமண அறிவித்தலை சான்றுப்படுத்துவதற்குரிய அதிகாரம் குறித்த பிரிவின் திருமணப் பதிவாளருக்கே உண்டு. (பெயர் மற்றும் வயதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது வேறு ஆவண​மொன்று)
  • திருமண அறிவித்தல் கிடைத்த 14 நாட்களின் பின்னர் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
    • திருமண அறிவித்தலை கையளித்து 14 நாட்களுக்கு முன்னர் திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமெனின், உரிய கட்டணத்தைச் செலுத்தி விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
  • இரண்டு பிரிவுகளின் திருமணப் பதிவாளர்களுக்கு திருமண அறிவித்தல்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பின், அறிவித்தல் பரிமாற்றம் செய்துகொள்ளப் பட்டதன் பின்னர் மற்றும் பதிவாளரின் சான்றிதழை வழங்கியதன் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
  • திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள இடமொன்றில் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனின், அதற்கான விஷேட அனுமதியைப் பெற்றுக் கொள்ள​ வேண்டுமென்பதோடு, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

** மேற்கூறிய விடயங்களை பூர்த்தி செய்ததன் பின்னர், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவாளரினால் திருமணம் பதிவுசெய்யப்படுவதோடு, திருமணச் சான்றிதழின் மூன்றாவது பிரதி​ மணமகளிடம் ஒப்படைக்கப்படும்.

கண்டிய திருமணங்களை பதிவு செய்வதற்கு பதிவாளர்களினால் அறவிடப்படும் கட்டணம்

இல.

விடயம்

யாருக்கு செலுத்தப்பட   வேண்டும்

யாரால் செலுத்தப் பட வேண்டும்

தொ​கை (ரூ)

பணம் செலுத்தும் முறை

1

பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ திருமண அறிவித்த​லை உள்ளிடுதல்

பதிவாளர்

விண்ணப் பதாரர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

2

மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது வேறு எந்த இடத்திலும் திருமண அறிவித்த​லை உள்ளிடுதல்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

விண்ணப் பதாரர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

3

திருமண அறிவித்தல் தொடர்பாக பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்

பதிவாளர்

திருமண தரப்பினர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

4

திருமண அறிவித்தல் தொடர்பாக மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

5

பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்

பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

6

மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

7

பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல்

பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

-----

-----

-----

 

8

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

9

19 வது பிரிவின் கீழ் அறிவித்தல் தொடர்பாக விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் விண்ணப்பம்

பதிவாளர்

விண்ணப்பதாரர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

10

19 வது பிரிவின் கீழ் திருமண அறிவித்தல் தொடர்பாக விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் விண்ணப்பம்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

விண்ணப்பதாரர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

11

24 வது பிரிவின் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணத்தை பதிவு செய்வதற்கான வீட்டு அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்

அரசாங்கத்திற்கு

திருமண தரப்பினர்

60.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்தல்

  • முஸ்லிம்திருமணம்மற்றும்விவாகரத்துசட்டத்தின்கீழ், இலங்கையில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம்.
  • இத்திருமணங்களைப் பதிவு செய்வதற்காக திணைக்களத்தால் முஸ்லிம் திருமணப் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • திருமணம் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் நிக்காஹ் சடங்குகள் செய்யப்படுகின்றன.
  • நிக்காஹ் சடங்குகளின் பின்னர், நிக்காஹ் சடங்குகளை நடாத்திய மௌலவியினால், மணமகளின் வலி, மணமகன் மற்றும் இரண்டு ஆண் சாட்சிகள் சகிதம் முஸ்லிம் திருமணப் பதிவாளரைச் சந்தித்து திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.
  • எனினும், அந்த நேரத்தில் திருமணத்தை பதிவு செய்ய முடியாவிட்டால், தாமதமான முஸ்லிம் திருமணமாக மீள்பதிவு செய்வதற்கு உரிய முஸ்லிம் பதிவாளருக்கு உத்தரவிடுவதற்கு உரிய பிரதேச செயலகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் (பிரதேச செயலாளர்) அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

வெளிநாட்டு திருமணங்களை பதிவு செய்தல் (திருமண பதிவுகள் இலங்கை தூதரகங்கள் அல்லது இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயங்களில் மேற்கொள்ளப்படும் எனின்)

  • தூதரககடமைகள்சட்டத்தின்கீழ், தூதுவர்/ உயர்ஸ்தானிகர் அல்லது தூதரக அதிகாரிக்கு வெளிநாட்டில் திருமணத்தை பதிவு செய்வதற்கு அதிகாரம் உள்ளது.
  • இங்கு குறைந்தபட்சம் ஒரு தரப்பினராவது இலங்கையராக இருத்தல் வேண்டும்.
  • குறித்த திருமணத்தை சிங்களம், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பதிவு செய்து கொள்ளலாம்.
  • திருமணத்தை பொதுவான திருமண சட்டத்தின் கீழ் அல்லது கண்டிய திருமண விவாகரத்து சட்டத்தின் கீழ் அல்லது முஸ்லிம் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். (முஸ்லிம் சட்டத்தின் கீழ் ஒரு திருமணத்தை பதிவு செய்வதற்கு முஸ்லிம் பதிவாளரொருவர் இருத்தல் அவசியமாகும்.)

சான்றிதழில் உள்ள பிழைகளை திருத்தியமைத்தல்

பொதுவான திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்

  • திருமணத்தைபதிவுசெய்யும் போது ஏற்பட்ட பிழையை திருத்திக் கொள்வதற்கு குறித்த திருமணத்தின் தரப்பினர்களால் உரிய கோரிக்கையை பொருத்தமான அதிகாரம்பெற்ற  மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
  • தேவையான ஆவணங்கள்,
    • திருமணச் சான்றிதழ்
    • நீதிமன்றத்தால் கோரப்படும் ஆவணங்கள்
  • தரப்பினர் சட்டத்தரணியொருவர் மூலம் உரிய அதிகாரம்பெற்ற மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.
  • குறித்த ஆவணத்தில் பிழைகள் இருப்பின், அது தொடர்பாக திருமணம் நடைபெற்ற பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அறிவிப்பதன் மூலம் திருமண பதிவு ஆவணத்தின் இரண்டாவது பிரதி சரியாக உள்ளதா என்பதைத் பரீட்சித்துக் கொள்ளலாம்.

கண்டிய திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்

  • திருமணத்தைபதிவுசெய்யும் போது ஏற்பட்ட பிழையை திருத்திக் கொள்வதற்கு உரிய கோரிக்கையை திருமணத்தைப் பதிவு செய்த பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு முன்வைத்தல் வேண்டும்.
  • தேவையான ஆவணங்கள்,
    • திருமணச் சான்றிதழ்
    • விடப்பட்டுள்ள பிழை மற்றும் சரியான தகவல்​களை உள்ளடக்கிய சத்தியக் கடதாசி
    • இவ்விடயத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஏனைய ஆவணங்கள்

முஸ்லிம் திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்

  • திருமணத்தைபதிவுசெய்யும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பிழையை திருத்திக் கொள்வதற்கு உரிய கோரிக்கையை திருமணத்தைப் பதிவுசெய்த பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு முன்வைத்தல் வேண்டும்.
  • தேவையான ஆவணங்கள்,
    • திருமணச் சான்றிதழ்
    • விடப்பட்டுள்ள பிழை மற்றும் சரியான தகவல்​களை உள்ளடக்கிய சத்தியக் கடதாசி
    • இவ்விடயத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஏனைய ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்ததன் பின்னர் மாவட்டப் பதிவாளரினால் முறையான விசாரணையொன்றை மேற்கொண்டதன் பின்னர் உத்தரவை பிறப்பிக்கலாம்..

விவாகரத்தைப் பெற்றுக் கொள்ளல்

பொதுவான திருமண சட்டத்தின் கீழ் திருமணமொன்றை விவாகரத்து செய்தல்

  • இந்த விடயம் முற்றிலும் நீதிமன்ற நடவடிக்கையாகும். சட்டத்தரணி ஒருவரை அணுகி தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது பொருத்தமானது.

கண்டிய திருமணமொன்றை விவாகரத்து செய்தல்

  • விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டியது,
    • விண்ணப்பதாரர் கண்டிய பகுதியில் வசிப்பவராக இருந்தால், வசிப்பிடத்திற்குரிய  பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளரிடம்,
    • விண்ணப்பதாரர் கண்டிய பகுயியில் வசிக்காத பட்சத்தில், பிரதிவாதி கண்டிய பகுயியில் வசிப்பவராக இருந்தால், குறித்த பிரிவின் பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளரிடம் அல்லது திருமணம் பதிவு செய்யப்பட்ட பிரிவின் பிரதேச  செயலக பிரிவின் மாவட்டப் பதிவாளரிடம்,
    • இரு தரப்பினரும் கண்டிய பகுதிக்கு வெளியே வசிப்பவராக இருந்தால், திருமணம் பதிவு செய்யப்பட்ட பிரிவிற்குரிய பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளரிடம்.
  • விவாகரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவத்தை மாவட்டப் பதிவாளரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
    • கண்டிய திருமணச் சான்றிதழ்
    • முறைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள்
  • மாவட்ட பதிவாளரினால் இரு தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர்.
  • விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உறுதி செய்யப்பட்டால், மாவட்டப் பதிவாளர் விவாகரத்துக்கான கட்டளையை வெளியிடுவார். இல்லையெனில், விவாகரத்து நிராகரிக்கப்படும்.
    • மாவட்டப் பதிவாளரினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாவிடின், அதிருப்தியடைந்த தரப்பினர் 30 நாட்களுக்குள் மாவட்டப் பதிவாளரிடம் மேன்முறையீடு செய்யலாம்.
  • மாவட்ட பதிவாளரினால் குறித்த மேன்முறையீடு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதோடு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

முஸ்லிம் திருமணமொன்றை விவாகரத்து செய்தல்

  • முஸ்லிம்திருமணம்மற்றும்விவாகரத்துச்சட்டத்தின்கீழ்இடம்பெற்ற திருமணமொன்றை விவாகரத்து செய்வதற்கு, கணவன் அல்லது மனைவி தங்கள் அதிகார வரம்பிற்காக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட காதியிடம் கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும். (1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டம் 115 ம் அதிகாரத்தைப் பார்வையிடவும்)

விவாகரத்துசான்றிதழைப் பெற்றுக் கொள்ளல்

கண்டிய திருமண விவாகரத்துச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்

  • மாவட்டப்பதிவாளரால்வழங்கப்பட்டவிவாகரத்து தீர்ப்பு தொடர்பாக மேன்முறையீடுசெய்யப்படவில்லைஎன்றால் (தீர்ப்பு வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள்), மேன்முறையீட்டு காலத்தின் முடிவில் விவாகரத்து சான்றிதழை பெண் தரப்பினருக்கு வழங்கப்படும்.
  • விவாகரத்து தொடர்பான மாவட்டப் பதிவாளரின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் பட்சத்தில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விவாகரத்துச் சான்றிதழ் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரால் வழங்கப்படும்.

முஸ்லிம் திருமண விவாகரத்துச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்

  • திருமணத்தை விவாகரத்து செய்யும் போது, ​​சம்பந்தப்பட்ட பெண் தரப்பினருக்கு காதியினால் இலவசமாக பிரதியொன்று வழங்கப்படும் என்பதோடு, மேலதிக பிரதிகள் தேவைப்பட்டால், காதியின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பப் படிவத்தை முன்வைத்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். 

திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக் கொள்ளல்

  • திருமணச் சான்றிதழின் பிரதிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது திருமணம் நடைபெற்ற பகுதிக்குரிய பிரதேச செயலகத்திலேயாகும்.
  • குறித்த சான்றிதழ் தரவு அமைப்பில் சேமிக்கப்பட்டு இருந்தால், அருகிலுள்ள ஏதேனுமொரு பிரதேச செயலகத்திலிருந்தும் சான்றிதழின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
    • 1960.01.01 ம் திகதி முதல் 2020.01.01 ம் திகதி வரையிலான சான்றிதழ்களின் பிரதிகளை தரவு அமைப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். (தரவு அமைப்பில் உள்ளதா என்பதை உங்கள் அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் பரீட்சித்து உறுதிப்படுத்திக் கொள்ளம்.)
  • தேவையான விண்ணப்பப் படிவத்தை ஏதேனும் ஒரு பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளர் பிரிவிலிருந்து அல்லது இத்திணைக்களத்தின் இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
  • அறவிடப்படும் கட்டணம்,
    • திருமணச் சான்றிதழின் இலக்கம், பதிவு செய்யப்பட்ட பிரிவு மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி ஆகியன தெரிந்திருந்தால் - ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.120.00 ஆகும்.
    • திருமணச்சான்றிதழின்இலக்கம்மற்றும்பதிவு செய்த திகதி ஆகியன தெரியவில்லைஎன்றால் (இரண்டுவருடங்களுக்கு மேற்படாத ஆவணத்தேடல் அவசியம் என்பதால்) - ரு பிரதிக்கான கட்டணம் ரூ.250.00. ஆகும்.
  • உரிய கட்டணத்தை பிரதேச செயலகத்தில் அல்லது பதிவாளர் நாயகத்தின் இலங்கை​ வங்கியின்  (புறக்கோட்டை கிளை) கணக்கு இலக்கம் 7039827 இற்கு செலுத்தியதன் பின்னர் வங்கிச் சீட்டு (Bank Slip) மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • திருமணச் சான்றிதழைத் தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், விண்ணப்பப் படிவம் மற்றும் மேலே குறிப்பிட்டவாறு பணம் செலுத்திய பற்றுச் சீட்டுடன் சுயமுகவரியிடப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையையும் சேர்த்து சமர்ப்பித்தல் வேண்டும்.
  • திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தால், செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப தொடர்புடைய திருமணச் சான்றிதழின் கோரப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை வழங்கப்படும் என்பதோடு திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின், அது தொடர்பாக படிவம் B38 மூலம் அறிவிக்கப்படும்.

** அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Onlineமுறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.

திருமணச்சான்றிதழ்களின்மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப்பெற்றுக் கொள்ளல்

  • இந்தச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றும் திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் தொடர்பான விபரங்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.. மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றும் அலுவலகங்கள்
  • பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்புகள்
    • சிங்களம் – ஆங்கிலம்
    • ஆங்கிலம் – சிங்களம்
    • தமிழ் – ஆங்கிலம்
    • ஆங்கிலம் – தமிழ்
  • விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் :
    • வாரத்தின் அலுவலக நாட்களில் மு.ப. 9.00 மணி. – பி.ப. 2.30
    • சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் திறக்கப்படாது.
  • விண்ணப்பப் படிவத்தை மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலிருந்தோ அல்லது இணையதளத்திலிருந்தோ பெற்றுக் கொள்ளலாம்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
    • மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஆவணத்தின் அசல் பிரதி அல்லது பிரதேச செயலகத்திலிருந்து பெறப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • தபால் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனின், மேற்குறித்த தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக சுய முகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட கடித உறை
  • மொழிபெயர்ப்பு கட்டணம்
    • ஒரு மொழிபெயர்ப்புப் பிரதிக்கு ரூ. 600.00.
    • எத்தனை மொழிபெயர்ப்புப் பிரதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்
  • கால எல்லை : 05 அலுவலக நாட்கள்.

தற்போது ஒரு நாள் சேவை இல்லை

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் பிரதிகளை வழங்குதல்

  • ாடளாவியரீதியில்உள்ள 334 பிரதேச செயலகங்களின் கீழ் அமைந்துள்ள ஒவ்வொரு பதிவாளர் பிரிவிலும் நியமிக்கப்பட்டுள்ள பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பதிவாளர்களினால் இந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
  • சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் பிரதேச செயலகங்களினால் விநியோகிக்கப்படுகின்றன.

அலுவலக நேரம்

  • பிரதேசசெயலகங்களில்அமைந்துள்ளமாவட்டபதிவாளர்பிரிவு கிழமை நாட்களில் மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 3.45 வரை திறந்திருக்கும். (பணம் செலுத்துமிடங்கள் பி.ப. மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.)
    • சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்காக அலுவலகம் திறக்கப்படாது.
  • பிரிவுப்பதிவாளர்களின்அலுவலகநேரம்காலை மணி முதல் பிற்பகல் மணி வரையாகும்.

பிறப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படுவது குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்தினை அடிப்படையாகக் கொண்டாகும்.

வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

1.   பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்தல் வேண்டும்.

2,   ஒவ்வொரு பிறப்பு சம்பந்தமாகவும் அந்த பிறப்பு தொடர்பான படிவம் B23 இன் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கையை கிராம உத்தியோகத்தரினால் பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்புதல் வேண்டும்..

3.   பிறப்பு நிகழ்ந்த இடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் பிரிவின் பதிவாளரினால் பிறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. (பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் பட்டியல்)

4,  முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் CR01 படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் கையளித்தல் வேண்டும். குறித்த CR01 படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து அல்லது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

5.   பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதி பெற்ற நபர்கள்

  • தந்தை
  • தாய்
  • குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள்
  • பாதுகாவலர்

6.   பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதியான நபர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  • முறையாகபூர்த்திசெய்யப்பட்டபதிவுசெய்தல்CR01 படிவம்
  • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி (இல்லையெனில் இலக்கம் 7 ஐப் பார்க்கவும்)
  • பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதிகள்
  • தேசிய அடையாள அட்டையின் அசல் மற்றும் புகைப்படப் பிரதி

7.   பெற்றோர் திருமணமாகாதவர்களாக இருந்தால், தந்தையின் விபரங்களை உள்ளிடுவதற்காக பெற்றோர் இருவரும் பிறந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் செல்ல வேண்டும்.

8.   பிறந்த 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். பிறந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் பிறப்பி​னை பதிவு செய்து கொள்ள முடியுமென்பதோடு அதற்கு தாமதமான பிறப்பு பதிவு செய்தல் விபரங்களைப் பார்வையிடவும்.

9,   பிறப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர், தகவல் கொடுப்பவருக்கு பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று இலவசமாக வழங்கப்படும்.

10. பிறந்த திததி மற்றும் இடம் ஆகியவை தாய்க்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் மாத்திரம் கூட (சில சமயங்களில் அதைவிடக் குறைவான தகவல்கள் அளிக்கப்பட்ட போதிலும்) பிறப்பினை பதிவு செய்ய முடியும். அங்கு வழங்கப்படும் தகவல்கள் தொடர்பான நிரல்கள் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

 

*நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)

வைத்தியசாலையொன்றில் (அரசாங்க அல்லது தனியார்) நிகழும் பிறப்பினை பதிவு. செய்தல்

  • பிறப்புபதிவுசெய்யப்படுவது பிறப்புநிகழ்ந்தஇடத்திற்கான பிறப்புமற்றும்இறப்புபதிவாளரினால் ஆகும். (பிறப்புமற்றும்இறப்பு பதிவாளர்களின் பட்டியல்) பிறப்பு நிகழ்ந்தது ஒரு வைத்தியசாலையில் என்றால் குறித்த இடத்திற்காக நியமிக்கப்பட்ட அல்லதுவைத்தியசாலையில் நியமிக்கப்பட்டுள்ள பதிவாளருக்கு பிறப்பு பதிவு செய்வதற்காக அறிவிக்கப்படல் வேண்டும்.
  • பிறப்பினை பதிவு செய்வதற்காக அறிவித்தல் விடுப்பதற்கு தகுதிபெற்ற நபர்கள்,
    • தந்தை
    • தாய்
    • குழந்தை பிறந்த நேரத்தில் அருகிலிருந்த நபர்கள், குழந்தையை பொறுப்பேற்றவர்கள்
    • வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி
  • பெற்றோர்திருமணமாகாதவர்களாகஇருந்தால், தந்தையின் தகவலை உட்​சேர்ப்பதற்காக பெற்றோர் இருவரும், பிறப்பு நிகழ்ந்த வைத்தியசாலைக்குரிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளரிடம் செல்ல வேண்டும்.
  • பிறப்பினை அறிவிப்பதற்காக உரிய பதிவுசெய்தல் படிவம் CR01 இனை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பிறப்பி​னை பதிவு செய்வதற்காக அறிவித்தல் விடுப்பதற்கு தகுதிபெற்ற நபர்களினால் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள ;
    • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் படிவம் CR01
    • பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் வைத்தியசாலையினால் வழங்கப்படும் அறிக்கை
    • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி
    • பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதி
    • தேசிய அடையாள அட்டையின் அசல் மற்றும் புகைப்படப் பிரதி
  • அறிவித்தல் விடுப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழின் பிரதியொன்று வழங்கப்படும்.

*நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)

பதிவுசெய்யப்பட்ட தோட்டமொன்றில் நிகழும் பிறப்பினை பதிவு. செய்தல்

  • பிறந்த07 நாட்களுக்குள் பிறப்பைப் பதிவு செய்வதற்கான அறிவித்தலை வழங்குவதற்கு தகுதியுள்ள பின்வரும் நபர்களால் தோட்ட அதிகாரியிடம் (தோட்ட அதிகாரியொருவர் இல்லாத சந்தர்ப்பத்தில் அல்லது தோட்ட அதிகாரி அறிவித்தல் விடுக்கும் பொறுப்பை ஏற்கவில்லையாயின் பிறப்பு நிகழ்ந்த இடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தரிடம்) தெரிவித்தல் வேண்டும்.
  • தோட்ட அதிகாரி இல்லாத சந்தர்ப்பத்தில் கிராம உத்தியோகத்தரிடம் பிறப்பு தொடர்பாக அறிவிப்பதாயின் வீட்டில் நிகழ்ந்த பிறப்பைப் பதிவு செய்தல் தொடர்பான விபரங்களைப் பார்வையிடவும்.
  • தகவல் கொடுப்பதற்குத் தகுதிபெற்ற நபர்கள்
    • தந்தை
    • தாய்
    • குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள்
    • பாதுகாவலர்
  • தோட்ட அதிகாரியினால் தோட்டத்தின் பிறப்பு அறிக்கையை உறுதிப்படுத்தி பிறப்பினை பதிவு ​செய்யும் நபரினால் வழங்கப்படும் பதிவு ​செய்தல் CR01 படிவத்துடன்மாவட்ட வைத்திய அதிகாரி ஊடாக மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பப்படும்.
  • மேலதிக மாவட்டப்பதிவாளர்பிறப்பைப்பதிவுசெய்து, பிறப்புச் சான்றிதழை சம்பந்தப்பட்ட தோட்ட அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்.
  • அறிவிப்பாளருக்கு தோட்ட அதிகாரியிடமிருந்து பிறப்புச் சான்றிதழை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

** நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)

வெளிநாடுகளில் நிகழும் பிறப்புகளை அந்தந்த நாட்டில் பதிவு செய்து கொள்ளல்

  • இலங்கைபெற்றோருக்கு (குறைந்தது ஒரு தரப்பினர் இலங்கையராக இருத்தல் வேண்டும்) வெளிநாட்டில்பிறந்த குழந்தைகளின் பிறப்புகளை வெளிநாட்டில் பதிவு செய்து கொள்ளலாம்
  • பிறப்புகள் பதிவு செய்யப்படுவது பிறப்பு நிகழ்ந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் / இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலேயாகும்
  • பிறப்பு அறிவிப்பிற்குத் தேவையான பிரகடனப் படிவத்தை இலங்கைத் தூதரகம் / இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
  • பிறப்பிளை பதிவதற்காக அறிவித்தல் வழங்குவதற்கு தகுதியான நபர்கள்,
    • தந்தை
    • தாய்
    • பாதுகாவலர்
  • சமர்ப்பிக்கவேண்டியஆவணங்கள், (அசல் மற்றும் நகல் பிரதிகளின் ஒரு தொகுதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
    • முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட பிரகடனப் பத்திரம்
    • பிறப்பை உறுதிப்படுத்துவதற்குரிய ஆவணங்கள் (பிறப்பு நிகழ்ந்த வெளிநாட்டினால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது வைத்தியசாலை அறிக்கை)
    • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி
    • பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதி
    • குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய கடவுச் சீட்டு மற்றும் விசா
    • தாய் மற்றும் தந்தை வெளிநாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அச் சான்றிதழ்
  • அரசாங்கக் கட்டணமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் விதிக்கப்பட்ட தொகையை அந்தந்த நாட்டின் செல்லுபடியாகும் நாணயத்தில் செலுத்தப்படல் வேண்டும்.

வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பி​னை இந்த நாட்டில் பதிவு செய்தல்

  • ஒருவருடகாலத்திற்குள் அரசாங்க கட்டணத்தைச் செலுத்திசம்பந்தப்பட்டநாட்டின்தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகம்மூலம்பிறப்பைப்பதிவுசெய்து கொள்ளமுடியாவிட்டால், குறித்த பிறப்பை காலம் கடந்த பிறப்பு என பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த நாட்டின் தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும். குறித்த ஆவணங்களை அனுமதிக்காக உரிய தூதரகத்தின் மூலம் மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பப்படும்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், (அசல் மற்றும் புகைப்படப் பிரதிகளின் ஒரு தொகுதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)

தேவையான ஆவணங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பிரகடப் பத்திரம்
  • பிறப்பை உறுதிப்படுத்துவதற்குரிய ஆவணங்கள் (பிறப்பு நிகழ்ந்த வெளிநாட்டினால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது வைத்தியசாலை அறிக்கை)
  • பெற்றோரின் திருமணச் சான்றிதழ் (சான்றுப்படுத்திய பிரதி)
  • பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் (சான்றுப்படுத்திய பிரதி)
  • குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் தாய் பயன்படுத்திய கடவுச் சீட்டு மற்றும் விசா
  • தாய் மற்றும்/அல்லது தந்தை வெளிநாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அச் சான்றிதழ்
  • மேலும், குழந்தை பிறந்து ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னர் / நிறைவடைந்ததன் பின்னர் ஆகிய எச் சந்தர்ப்பத்திலும் சம்பந்தப்பட்ட தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மூலம் பதிவு செய்யப்படவில்லையெனின், மாளிகாவத்தை மத்திய பதிவறையில்  ஆவணங்களை சமர்ப்பித்து பிறப்பினை பதிவு செய்து கொள்ளலாம்.
  • பிறப்பை அறிவிப்பிற்குத் தேவையான பிரகடனப் படிவத்தை மாளிகாவத்தை மத்தியப் பதிவறையின் கொன்சியூலர் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.
  • பிறப்பினை பதிவதற்காக அறிவித்தல் வழங்குவதற்கு தகுதியான நபர்கள்,
    • தந்தை
    • தாய்
    • பாதுகாவலர்
  • அதற்காக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தூதரகப் பிரிவில் பதிவுக் கட்டணமாக ரூ.13,755.00 தொகையைச் செலுத்தி பெற்றுக்கொண்ட பற்றுச் சீட்டை சமர்ப்பித்தல் வேண்டும்.

**அதற்குத் தேவையான தகவல்களைப் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவறையின் பிரதிப் பதிவாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தொலைபேசி இல. +94 112 329 773 அல்லது +94 112 433 075 / 071 8255066

பதிவு செய்யப்படாத பிறப்பினை பதிவு செய்தல்

காலம் கடந்த பிறப்புகளை பதிவு செய்தல்

  • பிறப்பு நிகழ்ந்து மூன்றுமாதங்களுக்குள்பதிவுசெய்யப்படாவிட்டால், அத்தகைய பிறப்பை காலம் கடந்த பிறப்பாக பதிவு செய்து கொள்ளலாம். (8/2008 சுற்றறிக்கையைப் பார்க்கவும்.)
  • அதற்காக, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின் 24வது பிரிவின் கீழான ஒரு பிரகடனத்தைபிறப்பு நிகழ்ந்த இடத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். (மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் பத்திரத்திற்கு, பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரினால் அனுமதி வழங்கப்படலாம்.)
  • பிரகடனப் பத்திரத்தை சமர்ப்பிக்கத் தகுதியானவர்கள்,
    • பெற்றோரில் ஒருவர்
    • குழந்தையின் பாதுகாவலர்
    • ஆர்வமுள்ள எவரேனும் ஒருவர்
  • பிரகடனப்பத்திரத்திற்கான கட்டணம் ரூ. 60.00.
  • பிறந்த ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் பத்திரத்துடன் பின்வரும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    • பெற்றோர்திருமணம்முடித்தவர்களாயின், அவர்களது திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி​யொன்று
    • பிறந்த நபரின் பிறந்த திகதி மற்றும் இடத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்று
      • வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
      • கிராம உத்தியோகத்தரின் பிறப்பு பதிவு அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி (B
      • தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
      • குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்
  • மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால், அதற்குப் பதிலாக பின்வரும் ஆவணங்களில் ஒன்று,
    • ஆரோக்கிய விருத்திப் பதிவேடு
    • ஞானஸ்நான சான்றிதழ்
    • பாடசாலை சேர்வு பதிவேட்டின் சான்றுப்படுத்திய பிரதி/ மாணவர் முன்னேற்ற அறிக்கை
    • தோட்ட நலன்புரி உத்தியோகத்தரின் அறிக்கை
    • பிறந்த திகதிக்கு அண்மித்து தயாரிக்கப்பட்ட சோதிடம் அல்லது ஜாதகக் குறிப்பு-
  • இந்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், தெரிந்த விபரங்களை உள்ளடக்கிய பிரகடனப் பத்திரம் மற்றும் உறுதிமொழிப் பத்திரம்
  • பிறந்து ஒரு வருடத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான சான்றிதழ் (வெற்று சான்றிதழ்)
    • பெற்றோர் திருமணம் முடித்தவர்களெனின் அவர்களது திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்திய பிரதி
    • பிறந்த நபரின் பிறந்த திகதி மற்றும் இடத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்று
      • வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்திய பிரதி
      • கிராம உத்தியோகத்தரின் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்திய பிரதி  (B
      • தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்திய பிரதி
      • குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்
  • மேலே உள்ள ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால், அதற்குப் பதிலாக பின்வரும் ஆவணங்களில் ஒன்று,
    • ஆரோக்கிய விருத்திப் பதிவேடு
    • ஞானஸ்நான சான்றிதழ்,
    • பாடசாலை சேர்வு பதிவேட்டின் சான்றுப்படுத்திய பிரதி/ மாணவர் முன்னேற்ற அறிக்கை
    • தோட்ட நலன்புரி உத்தியோகத்தரின் அறிக்கை
    • பிறந்த திகதிக்கு அண்மித்து தயாரிக்கப்பட்ட சோதிடம் அல்லது ஜாதகக் குறிப்பு-

இந்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், தெரிந்த விபரங்களை உள்ளடக்கிய பிரகடனப் பத்திரம் மற்றும் உறுதிமொழிப் பத்திரம்

அனுமான வயது சான்றிதழ்களை வழங்குதல்

  • பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்வதற்கு சரியான தகவலை (வைத்தியசாலைபிறப்பு அறிக்கை/ கிராம உத்தியோகத்தர் அறிக்கை போன்ற பிறப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம்) ழங்க முடியாத எந்தவொரு நபரும், பிறந்த இடத்திற்குரிய பிரதேச செயலகத்தில் அனுமான வயதுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேவையான ஆவணங்கள்
    • பிரகடனப் பத்திரம்
    • ஆவண தேடல் முடிவுகள்
    • சத்தியக் கடதாசி மற்றும் அறிக்கைகள்
    • கிராம உத்தியோகத்தர் அறிக்கை
    • பிறப்பை நிரூபிக்கக்கூடிய தகவல்
    • பிறந்த திகதியை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் அனுமான வயதுச் சான்றிதழில் பிறந்த திகதியை பதிவு செய்து கொள்ளலாம்.
  • இது சம்பந்தமாக மேலதிக விபரங்கள் தேவைப்படின், அருகிலுள்ள பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரை தொடர்பு கொள்ளவும்

பிறப்புச் சான்றிதழில் உள்ளிடப்பட்ட விபரங்களைத் திருத்துதல்

  • பிறப்புபதிவு செய்தல்குறிப்பொன்றில்,
    • 01 வது நிரலின் விபரம் - பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம்
    • 02 வது நிரலில் எந்தவொரு பெயரும் உள்ளிடப்படாத சந்தர்ப்பத்தில், ஒரு பெயரை உள்ளிடுவதற்கு அல்லது பிறப்புச் சான்றிதழில் உள்ளிடப்பட்ட பெயரை பின்னர் மாற்றுவதற்கு
    • 03 வது நிரலின் விபரம் – ஆண்/பெண்
    • 04 வது நிரலின் விபரம் - தந்தையின் விபரங்களை (இனம் தவிர) திருத்துவதற்கு
    • 05 வது நிரலின் விபரம். – தாயின் அனைத்து விபரங்களையும்
    • 06 வது நிரலின் விபரம். – பெற்றோர் திருமணமானவர்கள்/ திருமணமாகாதவர்கள்
    • 07 வது நிரலின் விபரம். – பாட்டனின் விபரங்கள்
    • 09 வது நிரலின் விபரம். – அறிவிப்பாளரின் விபரங்கள்

ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

  • ​இது தொடர்பான பிரகடனப் பத்திரத்தை, பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
  • பிரகடனப் பத்திரத்தை சமர்ப்பிக்க முடியுமானவர்கள்,
    • பிறப்புக்குரிய நபர்
    • தந்தை அல்லது தாய்
    • சட்டப்பூர்வ பாதுகாவலர்
    • பிறப்புக் குறிப்பிலுள்ள ஏதேனும் விபரங்களில் திருப்தியடையாத நபரொருவர்
  • பிரகடனப் பத்திரத்திற்கான கட்டணம் ரூ. 60.00.
  • திருத்தப்பட வேண்டிய பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்றை பிரகடனப் படிவத்துடன் கட்டாயம் இணைத்தல் வேண்டும். கோரிக்கையின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கு எழுத்துப்பூர்வமான ஆதாரம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • பிரகடனப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள உரிமைக் கோரலின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கு பெற்றுக்கொள்ள முடியுமான சில எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் உங்கள் வசதிக்காக கீழே காட்டப்பட்டுள்ளன.
    • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • குழந்தைகளின் பெயர்கள்/ உடன்பிறப்புகளின் பெயர்கள்
    • தந்தை மற்றும் தாயின் பிறப்புச் சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள்
    • பெற்றோரின் திருமணத்தைப் பதிவு செய்ததன் பின்னர் பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட  பிரதி
    • திருமணத்தைப் பதிவுசெய்த பின்னர் பிறந்த குழந்தைகள் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட குழந்தையின் மூத்த அல்லது இளைய குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • மருத்துவமனைகள், மகப்பேறு இல்லங்களில் உள்ள பதிவுகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி அல்லது மகப்பேற்று தாதியின் பதிவேட்டின் பிரதி.
    • மாணவர் ​​முன்னேற்ற அறிக்கை, பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் பதிவேட்டின் பிரித்தெடுப்பு.
    • பிறப்புக்குரிய நபர் மற்றும் பெற்றோரின் பெயர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலின் பிரதி

தந்தை மரணித்திருப்பின் அவரது இறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி

ஒரு குழந்தையை தத்தெடுத்தல்

  • தத்தெடுக்கும் குழந்தையின்வயது 14 வருடங்களுக்கு மேற்படாதிருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரரினால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்,
    • விண்ணப்பதாரரின் வயது 25 வயதுக்கு மேற்பட்டிருத்தல் வேண்டும்.
    • விண்ணப்பதாரருக்கும் சம்பந்தப்பட்ட குழந்தைக்கும் இடையிலான குறைந்தபட்ச வயது இடைவெளி 21 ஆண்டுகள் இருத்தல் வேண்டும்.
    • சம்பந்தப்பட்ட குழந்தை விண்ணப்பதாரரின் வழித்தோன்றல், விண்ணப்பதாரரின் சகோதரன்/ சகோதரியின் குழந்தை அல்லது அவர்களது வழித்தோன்றல் அல்லது அவர்களது மனைவியின் குழந்தையாக இருந்தால், மேற்குறிப்பிட்ட நிபந்தனை பொருந்தாது.
  • தத்தெடுக்கப்படும் குழந்தை 10 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் குழந்தையின் இணக்கப்பாடு அவசியமாகும்.
  • சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தத்தெடுப்ப்பதற்கான கட்டளை வழங்கப்படுவது மாவட்ட நீதிமன்றத்தினாலாகும்.
  • குறித்த கட்டளையை (படிவம் இலக்கம் 4) அடிப்படையகக் கொண்டு தத்தெடுப்புச் சான்றிதழ் (படிவம் B, இதன் மூலம் தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் பிறப்பை மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம்.
  • பிறப்பை மீள்பதிவு செய்துகொள்வதற்காகப் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
    • பிறப்பை மீள் பதிவு செய்துகொள்வதற்கான விண்ணப்பம் (B
    • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • தாய் மற்றும் தந்தையின் பிறப்புச் சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • குழந்தைக்கு இதற்கு முன்னர் பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்திருந்தால், அந்தச் சான்றிதழ் அல்லது பதிவு செய்யப்படவில்லையாயின் வெற்று தேடுதல் முடிவுப் பத்திரம்
  • பிறப்பை மீள் பதிவு செய்வதற்கு, மேற்குறிப்பிட்ட தகவல்களுடன் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் குழந்தை பிறந்த இடத்திற்குரிய பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை பெற்றுக்கொள்ளல்.

சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை பெற்றுக்கொள்ளல்.

பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

  • பிறப்புச்சான்றிதழின்பிரதிகளை பிறந்தஇடத்தின்பிரதேசசெயலகத்தில்இருந்துபெற்றுக் கொள்ளப்படல்வேண்டும்.
    • குறித்த சான்றிதழ் தரவு அமைப்பில் இருந்தால், உங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
    • தரவுகள்உள்ளதாஎன்பதை உங்கள் அருகில் உள்ள பிரதேச செயலகத்தில் நீங்கள் பரிசோதித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.)
  • தேவையான விண்ணப்பப் படிவத்தை எந்தவொரு பிரதேச செயலகத்திலும் உள்ள மாவட்ட பதிவாளர் பிரிவில் / இணையதளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
  • அறவிடப்படும் கட்டணம்,
    • பிறப்புச்சான்றிதழின்இலக்கம்மற்றும்பதிவுசெய்யப்பட்ட திகதி தெரிந்திருந்தால் - ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.120.00.
    • பிறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி தெரியவில்லை எனின் (இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாத ஆவணத் தேடல் அவசியமென்பதால்) - ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.250.00.
  • உரிய கட்டணத்தை பிரதேச செயலகத்தில் அல்லது பதிவாளர் நாயகத்தின் இலங்கை வங்கியின் (புறக்கோட்டை கிளை) கணக்கு இலக்கம் 7039827 இற்கு செலுத்தி, வங்கியினால் வழங்கப்படும் பற்றுச் சீட்டு (Bank Slip) மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைக் கோரலாம்.
  • பிறப்புச் சான்றிதழை தபால் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பின், சுய முகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட கடிதவுறை, விண்ணப்பப் படிவம் மற்றும் மேற்குறித்தவாறு பணம் செலுத்திய பற்றுச் சீட்டு ஆகியவற்றுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால், செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப தொடர்புடைய பிறப்புச் சான்றிதழின் கோரப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை வழங்கப்படும் என்பதோடு பிறப்பு பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் அது தொடர்பாக படிவம் B38 மூலம் தெரிவிக்கப்படும்.

** அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Online முறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.

பிறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

  • இந்தச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரியும் திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் தொடர்பான விபரங்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.. மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரியும் அலுவலகங்கள்
  • பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்புகள்
    • சிங்களம் – ஆங்கிலம்
    • ஆங்கிலம் – சிங்களம்
    • தமிழ் – ஆங்கிலம்
    • ஆங்கிலம் – தமிழ்
  • விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் : வாரத்தின் அலுவலக நாட்களில் மு.ப. 9.00 மணி. – பி.ப. 2.30 (சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் திறக்கப்படாது.)
  • விண்ணப்பப் படிவத்தை மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலிருற்தோ அல்லது இணையதளத்திலிருந்தோ பெற்றுக் கொள்ளலாம்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
    • மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஆவணத்தின் அசல் பிரதி அல்லது பிரதேச செயலகத்திலிருந்து பெறப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • தபால் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனின், மேற்குறித்த தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக சுய முகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட கடித உறை
  • மொழிபெயர்ப்பு கட்டணம்
    • ஒரு மொழிபெயர்ப்புப் பிரதிக்கு ரூ. 600.00.
    • எத்தனை மொழிபெயர்ப்புப் பிரதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்
  • கால எல்லை : 05 கடமை நாட்கள்.
  • தற்போது ஒரு நாள் சேவை இல்லை.

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk